சுனாமி அனர்த்தத்தின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2019 (வியாழக்கிழமை)
26.12.2004 அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா யாவா தீவுகளில் கடலுக்கடியில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வைத் தொடர்ந்து உருவாகிய ஆழிப்பேரலைகளானது (சுனாமி) இந்து சமுத்திரத்தின் கரையோர நாடுகளை தாக்கிய பேரனர்த்தத்தின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று ஆகும்.
ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கடலில் சங்கமித்த நாள், நம்மைக் கடந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. 2004 ஆம் டிசம்பர் மாதம் 26ம் திகதி இந்தோனேசியாவின் சுமத்ராவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் உருவான சுனாமிப் பேரலை, இந்தோனேசியாவை மாத்திரமல்லாது இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மாலைதீவு, பங்களாதேஷ் என ஏறக்குறைய 12 நாடுகளின் கரையோரப் பகுதிகளை அழித்திருந்தது.
இலங்கையில் தமிழர் பகுதிகளான அம்பாறை தொடக்கம் திருகோணமலை முல்லைத்தீவு என யாழின் காங்கேசன்துறை வரையான பகுதிகளும் சுனாமி பேரலையால் தாக்கப்பட்டு பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியிருந்தன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.