கண்டியில் நேற்று நடைபெற்ற 18 வது சர்வதேச S K A காரத்தே போட்டியில் (18th international S K A karate championship) வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
இப்போட்டியில் 11 வயது பிரிவு ஆண்களுக்கான காட்டா போட்டியில் செல்வன் முரளி பரிதியன் முதலாம் இடத்தினையும், பாலேந்திரன் ஹரீஸ் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டார்கள்.
11 வயது பிரிவு ஆண்களுக்கான குமித்தே சண்டைப்போட்டியில் செல்வன் முரளி பரிதியன் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டார்.
9 வயதிற்குட்பட்டோருக்கான குமித்தே போட்டியில் செல்வன் பாலேந்திரன் வசீகரன் 3ஆம் இடங்களைப் பெற்றுள்ளனர்.
40 வயதிற்கு மேற்பட்டருக்கான குமித்தே,காட்டா போட்டிகளில் திருமதி முரளி மாலதி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
நேபாளம், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து வீரர்கள் காரத்தே போட்டியில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி போட்டிகள் யாவும் கண்டி திகன உள்ளக விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. மேற்படி மாணவர்கள் பருத்தித்துறை காரத்தே பயிற்றுவிற்பாளர் இரட்ணசோதி மாஸ்டரின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.