19வது சர்வதேச சோட்டோகான் கராத்தே அசோசியன் நடாத்திய கராத்தே சாம்பியன்சிப் 2020 (19th I nternational s.k.a karate championship srilanka 2020) ற்கான போட்டிகள் மாத்தளை அலிக் அளுவிகாரை உள்ளக விளையாட்டரங்கத்தில் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்றது.
இப்போட்டிக்கு இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளை அழைக்கப்பட்ட போதிலும் இந்தியா வீரவீராங்கனைகள் மட்டும் வருகை தந்திருந்தனர்.
இப்போட்டியில் பருத்தித்துறை தற்காப்பு கலையகத்தின் மாணவர்களாகிய வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருமதி முரளி மாலதி 45 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் காட்டா போட்டியில் தங்கப் பதக்கமும், 11 வயதுப் பிரிவில் முரளி பரிதியின் காட்டா மற்றும் குமித்தே போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கமும் பெற்றுக் கொண்டார்.
இவர்கள் சென்சேஸ் இரத்தினசோதி (7th Dan WKF) அவர்களின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.