யாழ் வல்வெட்டித்துறை கடற்கரையோரப் பிரதேசத்தில் நேற்று (14) அதிகாலை இலங்கை கடற்படை நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையின் போது ஒரு தொகை கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து கேரள கஞ்சா 126 கிலோ கிராம், 2 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் அவர் பயன்படுத்திய கெப் ரக வாகனமும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவற்றின் இலங்கைப் பெறுமதி 50 மில்லியன் (5 கோடி ரூபா) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
32 மற்றும் 28 வயதுடைய கிளிநொச்சி மற்றும் மாங்குளத்தைச் சேர்ந்த மூவரே வல்வெட்டிதுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.