31ம் நாள் (அந்தியேட்டி) நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் - கதிர்காமத்தம்பி விமலதாஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2018 (சனிக்கிழமை)
31ம் நாள் (அந்தியேட்டி) நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்
கதிர்காமத்தம்பி விமலதாஸ்
(ஓய்வு பெற்ற நில அளவை அத்தியட்சகர், சமாதானநீதவான் மற்றும் உத்தரவு பெற்ற நில அளவையாளர்)
தோற்றம் :- 15.03.1953 மறைவு :- 30.04.2018
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிர்காமத்தம்பி விமலதாஸ் அவர்கள் 30/04/2018 இல் இறைபதம் அடைந்தார். அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 29/05/2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை எமது இல்லத்தில் நடைபெற்று ஊறணி தீர்த்த சமுத்திரத்தில் அஸ்தி கரைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து மதியம் வீட்டுக் கிருத்திய கிரியைகள் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதனை உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
மேலும் அன்னாரின் இறுதிக் கிரியைகளில் நேரில் கலந்துகொண்டவர்களிற்கும் எமக்கு பலவழிகளிலும் உதவிசெய்தவர்களிற்கும் தொலைபேசி,viber, whatsapp மற்றும் சமூகவலைத்தளங்கள் மூலம் ஆறுதல் கூறியவர்களிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.