31ஆம் நாள் அந்தியேட்டி நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் - வைத்திலிங்கம் சங்கர நாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/07/2018 (திங்கட்கிழமை)
31ஆம் நாள் அந்தியேட்டி நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்
வைத்திலிங்கம் சங்கர நாதன்
ரேவடி ஒழுங்கை, வல்வெட்டித்துறையை சேர்ந்த திரு. வைத்திலிங்கம் சங்கர நாதன் அவர்கள் 04.06.2018 அன்று காலமானார். அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் எதிர்வரும் புதன் கிழமை 04-07-18 அன்று அதிகாலை வேம்படி ஒழுங்கை வல்வெட்டித்துறை இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரணி சமுத்திரத்தில் அஸ்தி கரைக்கப்படும். அதனை தொடர்ந்து ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் மதிய போசனமும் வேம்படி ஒழுங்கை, வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்தில் நடைபெறவுள்ளதால், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
மேலும் இறுதிக் கிரியைகளில் நேரில் கலந்து கொன்டவர்களுக்கும் அன்னாரது துயரச் செய்தி அறிந்து நேரிலும், தொலைபேசிவாயிலாகவும் மற்றும் இலத்திரனியல் தளங்கள் மூலமாகவும் ஆறுதல் கூறியவர்கள் மற்றும் பல வழிகளிலும் உதவி செய்தவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.