யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஒய்வு பெற்ற தபாலதிபரும், சட்டத்தரணியுமான கனகசுந்தரம் நடேசன் அவர்கள் கடந்த 05.05.2016 அன்று சிவபதமடைந்தார்.
அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 03.06.2016 (வெள்ளிக்கிழமை) ஊறணி அந்தியேட்டி மடத்தில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் அன்னாரது துயரச் செய்தி அறிந்து தொலைபேசி மூலமும் நேரிலும் ஆறுதல் கூறியவர்கள், கண்ணீர் அஞ்சலி பிரசுரம் வெளியிட்டவர்கள், இரங்கல் உரை நிகழ்த்தியவர்கள் மற்றும் பல வழிகளிலும் உதவி செய்தவர்கள் அனைவருக்கும் எமது உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் TP - 0094-212265008
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.