31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழ் - குழந்தைவேல் ஞானவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2019 (சனிக்கிழமை)
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும்
நன்றி நவிலலும்
பிறந்த திகதி: 25.12.1934 இறந்த திகதி: 09.04.2019
அமரர் திரு.குழந்தைவேல் ஞானவேல்
கடந்த 08.04.2019 அன்று இறையடி சேர்ந்த எமது குடும்பத்தலைவர் அமரர் குழந்தைவேல் ஞானவேல் அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் 08.05.2019 (புதன்கிழமை) அன்று காலை வீட்டிலும் அதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு ஆத்மசாந்தி பிரார்த்தனையும் மதிய போசனமும் தமிழ்ச்சங்க மண்டபத்திலும் (உருத்திரா மாவத்தை, வெள்ளவத்தை) நடைபெறும். உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
எமது குடும்பத்தலைவர் இறைபதம் அடைந்த செய்தியைக் கேள்வியுற்று நேரில் வந்து துன்பத்தை பகிர்ந்து கொண்டோர்க்கும் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தோர்க்கும் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஆறுதல் தெரிவித்தோர்க்கும் மற்றும் பலவகைகளிலும் உதவிகள் புரிந்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.