எமது தாயார் திருமதி நிர்மலா சத்தியசீலன் அவர்களது அந்தியேஷ்டி நிகழ்வு எதிர்வரும் February 18 , புதன்கிழமை அவரது இல்லத்தில் ( லண்டன், இங்கிலாந்து) நடைபெறும். நாட்டில் நிலவும் கோவிட் நிலைமை காரணமாக அந்தியேஷ்டி நிகழ்வில் குடும்ப அங்கத்தவர்கள் மட்டும் பங்கேற்பதாக தீர்மானித்துள்ளோம்.
அம்மாவின் இழப்பை கேள்விப்பட்டதும் எமக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் மற்றும் சமுக வலைத்தளங்களுடாகவும் தமது இரங்கல் செய்திகளை அறிவித்த அனைவருக்கும் நன்றி. அம்மாவின் மறைவுச் செய்தியை பகிர்ந்து கொண்ட எம் ஊர் சார்ந்த அமைப்புகள் அனைத்துக்கும் நன்றி.
அத்துடன் எமக்கு உணவு வழங்கிய மற்றும் எமது அம்மாவின் இறுதி நிகழ்வு சிறப்புற நடக்க உதவி செய்த மற்றும் இறுதி நிகழ்வில் நேரடியாகவோ இணைய செயலிகளினூடாகவோ இணைந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. இறுதி வணக்கத்தின் போது மலர் வளையங்கள் வைத்து அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் நன்றி.
இப்படிக்கு
கணவர் Dr. சத்தியசீலன் , பிள்ளைகள், மருமக்கள் , பேரப்பிள்ளைகள், சகோதரிகள் மற்றும் குடும்பத்தினர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.