31ஆம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழ் - சுதர்சன் சிவகணேசன்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2019 (வியாழக்கிழமை)
31ஆம் நாள், நினைவஞ்சலி, அந்தியேட்டி அழைப்பும், நன்றி நவிலலும்
சுதர்சன் சிவகணேசன்
அன்னை மடியில் : 24-03-1979 ஆண்டன் மடியில் : 04-04-2019
வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவகணேசன் சுதர்சன் அவர்களின் அந்தியேட்டி நிகழும் எதிர்வரும் may மாதம் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்.
04-04-2019 அன்று மரண செய்தி கேட்டு எமக்கு நேரில் வருகை தந்தும், தொலைபேசி, முகநூல் வாயிலாகவும், துண்டு பிரசுரம், மலர்வளையங்கள், மலர் பந்தல்கள் மூலம் அஞ்சலி செலுத்திய அன்பு உள்ளங்கள், நண்பர்களுக்கும், உரை கவிதை ஆற்றிய நண்பர்களுக்கும், எமக்கு பல வழிகளிலும் ஒத்தாசை புரிந்த உள்ளங்களுக்கும், எமது குடும்ப சார்பாக நன்றி தெரிவிப்பதோடு 12-05-2019 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மதிய போசனத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.