31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர். சோமசேகரம் சாந்தகுனேஸ்வரி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2019 (புதன்கிழமை)
கடந்த 10.04.2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த எமது குடும்பத்தலைவியின் அந்தியேட்டி கிரியைகள் 10.05.2019 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 6:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஊறணி தீர்த்த சமுத்திரத்தில் அஸ்தி கரைக்கப்படும்.
அதனைத்தொடர்ந்து சபீண்டிகரன கிரியைகள் பகல் 11:00 மணியளவில் இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மா சாந்திப்பிரார்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டு நிற்கின்றோம்.
எமது குடும்பத்தலைவியின் மறைவுச் செய்தியறிந்து நேரில் வருகை தந்தும், தொலைபேசி, தந்தி வாயில்களாகவும் துண்டுப்பிரசுரம், பாதகைகள் மலர் வளையம் மூலமாகவும் அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்தோர்க்கும், மற்றும் பலவழிகளிலும் உதவிகள் ஒத்தாசைகள் புரிந்து அனைத்து உள்ளங்களுக்கும் எம் குடும்பம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.