அமரர் கே.தங்கவடிவேல் அவர்களின் 51ம் நாள் நினைவஞ்சலி கூட்டம் நாளை கலைவாணி சனசமுக நிலையத்தில் நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/09/2014 (சனிக்கிழமை)
கடந்த 29.07.2014 அன்று காலமான அமரர் கே.தங்கவடிவேல் அவர்களின் 51ம் நாள் நினைவஞ்சலி கூட்டம் நாளை மாலை 06.௦௦ மணியளவில் கலைவாணி சனசமுக நிலைய முன்றலில் நடைபெறவுள்ளது.
இந்நினைவு அஞ்சலி கூட்டத்தினை கம்பர்மலை பொன்கந்தையா கலாவாணி நீதிதேவி சன சமுக நிலையங்களும், சகுந்தலை கலைவாணி நீதிதேவி முன்பள்ளிகளும், மாதர் சங்கங்களும் மற்றும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலயமும் இணைந்து நடாத்தவுள்ளது.
இந்நினைவு அஞ்சலி கூட்டத்திற்கு அனைவரையும் வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.