Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஈழத்துக் கூத்துமரபின் மீள்கண்டுபிடிப்பிலும் புத்துருவாக்கத்திலும் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் பங்களிப்பு - க.மோகனதாசன்

பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2015 (ஞாயிற்றுக்கிழமை)

மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடம் வருடம் தோறும் பேராசிரியர் கா.சிவத்தம்பியை நினைவு கூர்ந்து ஆய்வாளர்களைக் கொண்டு நினைவுப் பேருரை நிகழ்த்தி வருகிறது. இவ்வாண்டு சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக நடன நாடகத் துறையுடன்  இணைந்து  29.07.2015 இந் நினைவுப் பேருரையினை நடாத்தியது.

அரங்க ஆய்வு  கூட நிறுவகர் பேராசிரியர் மௌனகுரு தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பேராசிரியை அம்மன்கிளி  பிரதம விருந்தினரகக் கலந்து கொண்டார்.

நடன நாடகத் துறைத் தலைவி கலாநிதி ஜெயரஞ்சனி வரவேற்புரை நிகழ்த்த விரிவுரையாளர் மோகனதாசன் ‘’ஈழத்துக் கூத்து மரபின் மீள் கண்டு பிடிப்பிலும் புத்துருவாக்கத்திலும் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் பங்களிப்பு  என்ற தலைப்பில் ’நினைவுப்  பேருரை நிகழ்த்தினார். அதன் சுருக்க வடிவம் வருமாறு,

பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் நினைவுப் பேருரை ஈழத்துக் கூத்து மரபின் மீள் கண்டு பிடிப்பிலும் புத்துருவாக்கத்திலும் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் பங்களிப்பு
---------------------------------------------------------------------------------------------------------------------
ஈழத்துத் தமிழர் அரங்கப் பாரம்பரியத்தினை அடையாளப்படுத்தும் விடயங்களில் கூத்து முக்கிய இடத்தினைப் பெறுகின்றது .இன்று ஈழத்து மரபுவழிக் கூத்து சம்பந்தமாக கதைத்தல், செயற்படுதல் என்பது ஈழத்து அரங்கவியலாளர்களுக்கு தவிர்க்க முடியாத தொன்றாகி விட்டது. இவ்வாறு பேசுபொருளாகவும் செயற்பாட்டுப் பொருளாகவும் உள்ள இம்மரபு வழிக் கூத்தின் நிலைபேற்றுத் தன்மைக்கும், சமுக அரங்காகக் காணப்படுவதால் ஒட்டு மொத்த ஈழத் தமிழ்ச் சமூகத்திற்கான பொதுக்கலை வடிவ உருவாக்கத்திற்கும் கூத்தின் மீள் கண்டுபிடிப்பும் புத்துருவாக்கமும் அவசியமாய் உணரப்படுகின்றது. மீள் கண்டுபிடிப்பு என்பது செம்மையாக இருந்த ஒன்றை மீளக் கொண்டு வருதலும், புத்துருவாக்கம் என்பது தற்கால செல் நெறிகளுக்கேற்ப அதனை வளர்த் தெடுத்தலுமாகும்.


60 களில் பேராசிரியர் வித்தியானந்தனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கூத்து மீள் கண்டுபிடிப்பானது இன்று பல்வேறு கிளைகளாகப் பரந்து பிரவாக மெடுக்கிறது. கூத்தின் மீள் கண்டு பிடிப்புப் பற்றி இன்று பல வாதப் பிரதி வாதங்கள் முன் வைக்கப் படுகின்றன. கூத்தை அப்படியே பேண வேண்டுமென்பர் சிலர். கூத்தை சமூகப் பின்னணியில் இருந்து பிரிக்காமல் உருவாக்க வேண்டுமென்பர் சிலர். பழைய கூத்துக்களை மீள் வாசிப்புச் செய்து புத்துருவாக்க வேண்டுமென்பர் சிலர். அதன் அழகியலை மீள் கண்டுபிடிப்புச் செய்து மீளுருவாக்க வேண்டுமென்பர் சிலர். கூத்தில் காணப்படும் செந்நெறி அம்சங்களை ஆதாரமாக்கி ஈழத் தமிழர்களுக்கான அடையாளமிக்க நாடக மரபினை உருவாக்க வேண்டுமென்பர் சிலர். இவற்றில் ஒன்றைச் செய்வோருமுண்டு பலதைச் செய்வோருமுண்டு. அனைத்தையும் செய்வோருமுண்டு. இவர்கள் அனைவரும் மரியாதைக்கு உரியவர்களே.

1956 களின் பிற்பகுதியில் இலங்கைக் கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்ட போது, அதன் தமிழ் நாடகப் பிரிவின் தலைவராகப் பேராசிரியர் கணபதிப்பிள்ளைக்குப் பின் பேராசிரியர் வித்தியானந்தன் பதவியேற்றார். அதன் செயலாளர் பொறுப்பை பேரா.சிவத்தம்பி ஏற்கிறார். கலைக் கழகத்து சிங்கள நாடகப் பிரிவினர் தமது பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்திய போது தமிழ் நாடகப் பிரிவினரும் அத்தகைய முயற்சிகளை இலங்கையின் தமிழர் வாழ் பிரதேசங்களில் மேற் கொண்டனர். இதில் கூத்தின் மீள் கண்டு பிடிப்பும் கூத்தின் புத்துருவாக்கமும் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன. பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் இம் முயற்சிகளை மேற் கொண்டபோது அதற்குப் பக்கபலமாய் இருந்தவர்களுள் முக்கியமானவர் பேராசிரியர்கா. சிவத்தம்பியவர்கள் ஆவார்.


அவருடைய மார்க்ஸியம் என்ற சமூக அரசியல் தத்துவமானது சமூக நிலையிலும் பொருளியல் தளத்திலும் அடக்கி யொடுக்கப்பட்ட மக்கட்பரப்பின் விடுதலையை நோக்காகக் கொண்டு இயங்கியற் பார்வையுடன் உருவானதாகும். பேராசிரியர் அவர்கள் மேற்படி இயங்கியற் பார்வையின் ஒளியில் தமிழரின் ஒட்டுமொத்த சமூக பண்பாட்டு வரலாற்றியக் கத்தை புரிந்து கொள்ளவும் எடுத்துப் பேசவும் முற்பட்டவராவார்.


அவ்வகையில் சமூக பண்பாட்டு ஆய்வாளர் மற்றும் திறனாய்வாளர் ஆகிய இரு நிலைகளில் அவர் இயங்கி நின்றுள்ளார். இந்தப் பின்னணியிலேயே சமுதாய அரங்கான மரபு வழிக் கூத்தினை எல்லோருக்கும் பொதுவான கலையம்சமாகக் கொண்டு வருவதற்கான முனைப்புடன் செயற்பட்டார்.


தாம் இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டதற்கு “கூத்தின் மீள் கண்டு பிடிப்பிலே தான் தமிழ்ச் செந்நெறிக் கலையான நடனத்தினது சமூக இயைபும், நாடகத்தின் மக்கள் நிலைப் பரவலும் தங்கியுள்ளன என்பதை இத்துறையில் புலமை ஈடுபாடு கொண்டோர் நன்கு உணர்ந்துள்ளனர்” என்ற பின்னணியினை பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கூறுகின்றார். பேராதனையில் கூத்துக்கள் மேடையேற்றிய காலங்களில் வாரந்தோறும் இவர் கொழும்பில் இருந்து பேராதனைக்கு வந்து நடிகர்களுக்கு நடிப்புப்பயிற்சியும் ஆலோசனைகளும் சொல்லிச் செல்வதானது தமிழர் பாரம்பரியக் கலையின்பால் இவருக்கிருந்த அதீத ஈடுபாட்டினைக் காட்டு வதாகவே அமைந்துள்ளது.


கர்ணன் போர், நொண்டி நாடகம் ஆகிய நாடகங்களை மட்டக்களப்பு மரபுவழி நாடகங்களில் இருந்து எடுத்து நேரச் சுருக்கத்தினை மேற் கொண்ட போது கூத்துக்களை எப்படிச் சுருக்கலாம் என்ற ஆலோசனைகளை சிவத்தம்பி அவர்களே வழங்கியிருந்தார். இந்த நாடகங்களைச் சுருக்கும் பணி அன்று பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மாணவராயிருந்த மௌனகுரு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வட்டக்களரியில் ஆடப்பட்ட அக்கூத்துக்களை படச்சட்ட அரங்கில் போடவைத்தவர்கள் பேராசிரியர் சிவத்தம்பியும் பேராசிரியர் வித்தியனந்தனுமவர். ஆனால் அது சம்பந்தமாக தனது கருத்தினைத் தெரிவிக்கும் போது, “கூத்து எங்களுடைய நவீன தேவைகளுக்கு உள்வாங்கப் படுவதற்கு அந்த அரங்க முன்மாதிரி ஒருகாரணமாக இருந்தது. அது மாத்திரமல்ல, வாதப் பிரதிவாதங்களையும் அதுகிளப்பிவிட்டது. இப்பொழுதும் அது சம்பந்தமாகப் பலத்த ஒருவிவாதம் இருக்கிறது. அப்படி எடுத்து அதை புறொசீனியம் அரங்கிற்கு கொண்டு வந்தது சரியா? பிழையா? என்பது ஒரு முக்கியமான விடயம். இன்னும் அது விவாதிக்கப்பட வேண்டும்.” எனக் கூறுகின்றார்.

மேலும் பேராசிரியர் வித்தியானந்தன் தயாரித்த கூத்துக்களில் நவீன நாடக நடிப்பின் நுட்பங்களை அளவோடு சேர்ப்பதற்கும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் ஆலோசனை முக்கியமானதாக விருந்தது. பாட்டை எப்படி நடிப்பாக வைரமுத்து அவர்கள் மாற்றினார்களோ அதே போல ஆட்டம் நடிப்பாக மாற வேண்டும் என்று கூறியதோடு அதற்கான சாத்தியப் பாடுகளையும் உரையாடல்கள், செயற்பாடுகள் மூலம் ஏற்படுத்தி இருந்தார். “ஆட்டம் என்பது ஒரு நடிப்புமுறை. சண்டை நடக்கும் போது நடிகர்கள் முன்னுக்கு வந்து பின்னுக்குப் போவார்கள். பக்க வாட்டில் செல்வார்கள். நாங்கள் அதைப் பார்த்துவிட்டு ஒருவருக்கொருவர் சண்டை செய்கிற மாதிரி ஒருவரை ஒருவர் பார்த்து ஆட முடியுமா என நடிகர்களிடம் கேட்டோம். பேரின்பநாயகமும் மௌனகுருவும் மிக அற்புதமாக ஆடினார்கள். இப்படியாக படிப்படியாக அந்த ஆட்டத்திற்குள் இருக்கிற நாடகத்தை வெளியே கொண்டு வருவதற்கான ஒருவாய்ப்பு இருந்தது.” என இதனை சிவத்தம்பி அவர்கள் தெரிவிக்கின்றார்.

அன்று மாணவராயிருந்த மௌனகுரு அவர்களால் இராவணேசன் பிரதியாக்கம் செய்யப்பட்ட போது பாத்திரவாக்கத்தினை செம்மையாக உருவாக்க கலாநிதி சிவதம்பி உதவியாக இருந்தார். பாடல்களைத் தெளிவாகப் பாடுதல், உணர்ச்சிபடப் பாடுதல், சொற்களை எடுத்து சில சொற்களுக்கு அழுத்தம் கொடுத்துப் பாடும் முறைமையினையும் கூத்திலே ஏற்படுத்துவதற்கு சிவத்தம்பி அவர்கள் ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.

“நாங்கள் இராவணனுடன் உள்ள போரினை முக்கியப்படுத்தி நாடகம் எழுத நினைத்தோம். மௌனகுருவின் உள்ளே ஒரு கவிஞன் இருக்கிறான். அதனைப் பயன்படுத்தி நாங்கள் இது இப்படியிருந்தால் நல்லாக இருக்கும் என்று கூற, அவர் அதனைப் பாட்டிலே போடுவார். ஆட்டத்தோடு உள்ள பாடல்களை அவர் எழுதினார். இப்படி உருவாகியதுதான் இராவணேசன். இராவணேசனுடைய ஆட்டங்கள் எல்லாம் மிகவும் பிரமாதமாக அமைந்தன. கூத்தின் புத்தாக்கத்திற்கும் நவீன ஆக்கத்துக்கும் இவைகளெல்லாம் ஒரு எல்லைக் கல்லாகவும் உதாரணங்களாகவும் கொள்ளப்பட்டன.” என இந்த அனுபவத்தினை சிவத்தம்பி அவர்கள் கூறுவார்.


அத்தோடு கூத்திலே மத்தளம், தாளத்துடன் ஏனைய கிராமிய இசைக் கருவிகள் பயன் படுத்துவதற்குரிய உத்தியினையும் கொடுத்தார். கூத்தின் வீச்சினை மேலும் அதிகரிப்பதற்கு காட்சித் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய ஒளியமைப்பிற்குப் பொறுப்பாகவும் இவரே இருந்தார். இத்துடன் நவீன ஒப்பனை முறைகளையும் கூத்திற்கு அறிமுகப் படுத்தினார்.

1960 களின் பிற்பகுதியில் மட்டக்களப்பு அரச அதிபராக தேவநேசன் நேசையா அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த போது மட்டக்களப்பின் கிராமியக் கலைகளை முக்கியமாகக் கூத்துக் கலையினை உயிர்ப்பித்தலிலும் ஊக்குவிப்பதிலும் பரவலாக்குவதிலும் அவர் அளப்பரியபங்கினை ஆற்றிய போது அவரை மையமாகக் கொண்டு ஊர்க்கூத்து, மேடையேற்றங்கள், அண்ணாவிமார் மாநாடுகள், அண்ணாவிமார் ஊக்குவிப்புகள் என்பன நிறைய நடந்தன. அவற்றுக்குப் பின்னணியாக நின்று செயற்பட்டவர்களுள் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் குறிப்பிடத் தக்கவர்.


இத்தோடு இவர்பல ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளையும் மேற் கொண்டிருக்கிறார். 1972இல் இருந்து 76வரையில் தான் இலங்கைக் கலைக்கழக தமிழ் நாடகக் குழுவின் தலைவராக இருந்த போது வன்னியில் ‘வன்னி வள நாட்டுக்கலைவிழா’ எனும் கலைவிழா வினை நடாத்தி அதன் மூலம் வன்னியில் உள்ளகலை வடிவங்களைப் பதிவு செய்தார். அவை இன்றும் இலங்கை வானொலியில் இருக்கின்றன. இவை தவிர சிலாபத்தில் ஆடப்பட்ட “வாளபீமன்”, “மார்க்கண்டேயர்” நாடகங்களையும் பதிப்பித்தார்.


அவர் மார்க்ஸியத் திறனாய்வியல் பயிற்சி பெற்று அவ்வணுகு முறையைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ற ஒன்றாக அறிமுகம் செய்வதில் முனைப்புடன் செயற்பட்ட காலகட்டத்தில் ஜோர்ஜ் தொம்சனின் கீழ் பெர்மிங்காமில் 1969 களின் இறுதியில் “Drama in ancient Tamil society” என்ற தலைப்பிலான தமது கலாநிதிப் பட்ட ஆய்வை மேற் கொண்டு நிறைவு செய்தார். இவ் ஆய்வானது 1981ல் நூலுருப்பெறுகின்றது. இந்த ஆங்கில மூலமானது கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு “பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்” எனும் பெயரில் 2004ல் வெளியிடப்படுகின்றது.


இவரது ஆய்வுகளின் படி தமிழர்களின் அரங்கக் கலை வடிவம் கூத்துத்தான் என்பது நிறுவப்படுகிறது

. 2000 வருடமாகத் தொடரும் இம் மரபு நம் மத்தியில் உள்ளது என்ற ஆய்வு முடிவுகள் கூத்துச் செயற்பாட்டாளர்களிடம் ஒரு சிலிர்ப்பினை ஏற்படுத்தியது. இவ் ஆய்வு கலைஞர்களுக்கு அளப்பரிய ஊக்கமளித்தது. சுருங்கச் சொன்னால் கூத்தை, புத்துருவாக்கம் செய்வோர்க்கும் மீளுருவாக்கம் செய்வார்க்கும் ஈழத் தமிழருக்குரிய ஒரு நாடக மரபை உருவாக்க வேண்டும் என்று பிரக்ஞை பூர்வமாக வேலை செய்பவர்க்கும் தமிழ் நாடக மரபு கூத்துமரபே என்பதற்கான தத்துவரீதியான பலத்தை இவ்வாய்வு தந்தது.

தமது நேர்காணல்களில் பல விடயங்களைக் கூறிநிற்கின்றார். தனது ஆளுமை வளர்சியிலும் பல்கலைக்கழக வாழ்க்கை நிலையிலும் நாடகமே தனக்கு முக்கிய பங்கு வகித்தது என்கிறார்.

கூத்தினை நகரத்திற்குக் கொண்டு வந்த போது கிராமத்திலிருந்து கூத்து பிடுங்கப்பட்டு விட்டதாக ஒருவாதம் முன்வைக்கப்படுகிறது. சமூகப் பின்னடைவாகப் போய் அதன் காரணமாகக் கவனிக்கப்படாமல் இருந்த ஒரு கலை வடிவத்தை மக்களுடைய தாக்குவதற்கான ஒரு நடவடிக்கையாகவே தாங்கள் கூத்தினை நகரப் பார்வையாளருக்கு அறிமுகம் செய்ததாகக் குறிப்பிடுகின்றார்.


மார்ச்சியம்பேசிய போதும் பின் நவீனத்தைச் சொல்லாடிய போதும் அவர்மரபின் எல்லைகளைத் தாண்டியதில்லை

. மரபில் வேர் கொண்ட பேராசிரியர், வரலாற்றுப் பொருள் முதல்வாத அணுகுமுறை என்பது மிகவும் வரட்டுத்தனமாகப் பிரயோகிக்கப் பட்டுக் கொண்டிருந்த தமிழ்ச் சூழலில் அதனைச் சற்றே நெகிழ்த்தி லூயி அல்தூசர், டெர்ரிஈகிள்ஸ்டன், பியர்மாசெறி ஆகியோர்  முன்வைத்த கருத்தாக்கங்களின் அடிப்படையில் மார்க்சிய அணுகுமுறையைச் செழுமையாக்கியதோடு அதனைப் பண்பாடுகளிலும் மரபுகளிலும் பிரயோகித்தும் இருப்பது முக்கியமானதொரு விடயமாகும்.


இவரது இம்முயற்சிகளால் கூத்தானது உயர்கல்வி முயற்சியாக இடம்பெறத் தொடங்கிற்று. பொதுக் கல்வித் தராதர சாதாரண, உயர்தர வகுப்புக்கள் முதல் பட்டதாரி வகுப்புவரை நாட்டுக் கூத்துகல்விப் பொருளாயிற்று. ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டு வட்டம் விஸ்தரிக்கப்ட்டது. மொத்தத்தில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஈழத்துத் தமிழரங்க வரலாற்றில் கூத்தின் மீள்கண்டுபிடிப்பிலும் புத்துருவாக்கத்திலும் பல்வேறு தளங்களில் செயற்பட்டு அதன்நிலை பேறிற்காக பாடுபட்டிருப்பது புலனாகின்றது.

க.மோகனதாசன்,
சுவாமி விபுலானந்த அழகியற்
கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப் பல்கலைக் கழகம்.


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
தேரேறி வருகின்றாள் எங்கள் தேசமன்னன் வளவுக்காரி.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2024 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் - இலங்கையின் மிகப்பெரிய செல்வச்சந்நிதி தேர் எரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2024 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2024 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
குரோதி வருடப்பிறப்பு புண்ணிய கால விசேட பூசைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2024 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2024 (வெள்ளிக்கிழமை)
Toronto ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2024 (வியாழக்கிழமை)
வல்வை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
5ம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
சேவை நலன் பாராட்டுக்கள் மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
பூரண சூரிய கிரகணம் - நாசாவின் படங்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - வீடு நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் திரு வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஒய்வுநிலை அதிபர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
பண்ணிசை, நடனக்கான வளவாளர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
அனலைதீவில் சூரிய ஒளி காற்றாலை மின்சார உற்பத்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2024 (வெள்ளிக்கிழமை)
பெண்கள் தனியாக பயணிக்க முதலாவது நாடாக இலங்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
முள்ளிவாய்க்கால், வல்வெட்டித்துறை போன்ற சொற்களை கூட உச்சரிக்க முடியாத நிலையில் நாம் உள்ளோம் - பேராசிரியர் ரகுராம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
திருக்குறள் கருங்கல்லில் பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப் பயிற்சியும் கற்றல் பயிற்சியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai