முயற்சி உடையவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 2017 - 2018 வரவு செலவுத் திட்டத்தில் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' திட்டத்தின் மூலம் தமது பொருளாதாரத்தை வளப்படுத்த ஆர்வமுள்ள எவரும் கடனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று மக்கள் வங்கியின் தலைமை அலுவலகத்தின் அபிவிருத்தி நுண்நிதி திணைக்கள பிரதி முகாமையாளர் எம்.சுகசீலன் தெரிவித்தார்.
வேலையற்ற பட்டதாரிகள் முதல் சிறு கைத்தொழில் மற்றும் பாரிய தொழிற்சாலைகளை நடத்துவோரும், ஊடகவியலாளர் உள்ளிட்ட பல தரப்பினருக்கு இதன் மூலம் கடன்கள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அவர் கருத்து வெளியிட்டார்.
2 இலட்சம் ரூபா வட்டியில்லாமல் கடனாகப் பெற்ற வீட்டைப் புனரமைக்கவும் வசதிகள் உண்டு.
தொழில் அபிவிருத்திக்காக இதன் மூலம் வழங்கப்படும் கடன் தொகைக்கான வட்டியை அரசாங்கம் செலுத்துகின்றது என்றும் மக்கள் வங்கியின் தலைமை அலுவலகத்தின் அபிவிருத்தி நுண்நிதி திணைக்கள பிரதி முகாமையாளர் எம்.சுகசீலன் தெரிவித்தார்.
சகல மக்கள் வங்கிக் கிளைகளிலும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்திற்கான விசேட கரும பீடம் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். (News.lk)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.