வடமராட்சியில் இரவில் வெளிச்சமின்றி சைக்கிளில் செல்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2014 (புதன்கிழமை)
வடமராட்சிப் பிரதேசத்தில் இரவு வேளைகளில் சைக்கிள்களில் வெளிச்சமின்றிப் பயணிப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமராட்சிப் பிரதேச சிவில் பாதுகாப்பு மற்றும் வீதி ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையங்கள் இணைந்து நடத்திய இக்கூட்டத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களான ஜப்வர், ரணவீர, பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யுவான் நந்தன நாராயண, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.மிடீன், நெல்லியடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுமித்பெரேரா ஆகியோருடன் பொது அமைப்புக்கள் சார்பில் பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து டிப்போ, வடமராட்சி தனியார் போக்குவரத்துச் சங்கம், ஓட்டோ உரிமையாளர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் நகர சபை, பிரதேச சபைகளின் தவிசாளர்களும் கலந்துகொண்டனர்.
பிரதேசத்தில் முக்கிய வீதிகளில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதன் பிரகாரம் இரவு வேளைகளில் சைக்கிள்களில் வெளிச்சமின்றி பயணிப்போர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை பாடசாலை பஸ் சேவைகளில் ஈடுபடும் பஸ்களின் தரம் குறித்தும் மாணவர்களின் நலன் குறித்தும் ஆராயப்படும். பஸ் சேவைகள் இடம்பெறும் நேரத்துக்கு முன்னர் தேவையின்றி பஸ்கள் நகரப் பகுதி பஸ் தரிப்பிடத்தில் தரித்து நிற்பதை தடுத்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.