யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி வீதியில் வல்லைப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து வெடிபொருட்களை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்றைய தினம் மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்களில் 11மோட்டார் எறிகணைகளும், 25மோட்டார் பரா எறிகணைகளும், 69 கைக்குண்டுகளும் இருப்பதாக விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
நேற்றையதினம் குறித்த பகுதியில் உள்ள குறித்த தோட்டக் காணியின் உரிமையாளர் தனது கிணற்றினை துப்பரவு செய்துள்ளார். இதன்போது அவரது காணியில் இருந்த கிணற்றுக்குள் வெடிபொருட்களை இருந்ததை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் குறித்த கிணற்றுக்குள் இருக்கும் வெடிபொருட்களை மீட்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் வழங்கிய உத்தரவினடிப்படையில் நேற்று மாலை இவற்றை மீட்கும் பணியில் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் ஆகியோர் இனைந்து மேற்கொண்டிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.