அம்பாறை கல்வி வலயத்திலுள்ள அம்பாறை தமிழ் வித்தியாலயத்தை நிரந்தரமாக மூடி விடுமாறு அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் விமலசேன மத்தும ஆராச்சி தெரிவித்துள்ளார்.
1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அம்பாறை தமிழ் வித்தியாலயத்த்தில் தற்பொழுது மாணவர்கள் எவரும் இல்லை. தற்பொழுது ஒரு அதிபரும் ஒரு ஆசிரியரும் கடமை ஆற்றுகின்றனர்.
இப்பாடசாலையின் கட்டடங்கள் யாவும், இராணுவம், மாணவர் படையணி, இளைஞர் படையணி, அம்பாறை கோட்டக் கல்வி அலுவலகம் என்பவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளன. பாடசாலையின் அதிபரின் அலுவலகம் மட்டுமே மீதமாக உள்ளது.
கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்திச்சபை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பொறியிலாளர்களாகவும் தொழில் நுட்ப உத்தியோகத்தவர்களாகவும், வேறு முக்கிய துறைகளில் கடமையாற்றிய தமிழர்களின் பிள்ளைகள் கல்வி கற்கும் நோக்கத்தில் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
1980 ற்குப் பின்னர் ஏற்பட்ட பின்னர் ஏற்பட்ட இனமுரண்பாடுகள் காரணமாக அம்பாறை நகரில் இருந்து தமிழர்கள் வெளியேறியதனால் மேற்படி பாடசாலையில் தமிழர்கள் எவரும் இல்லை.
இப்பாடசாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கல்வி கற்றுள்ளதை இங்குள்ள ஆவணங்கள் மூலம் அறிய முடிகின்றது. (தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.