Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

தமிழகத் திருக்கோயில் வரிசை: நாகைக்காரோகணம் - நாகபட்டினம் - வல்வையூர் அப்பாண்ணா

பிரசுரிக்கபட்ட திகதி: 28/10/2016 (வெள்ளிக்கிழமை)
சோழ நாட்டின் தென்கரைத் தலமான நாகைக்காரோகணம் சோழ மன்னர்களின் தலைநகரங்களில் ஒன்றாக விளங்கியது. நாகபட்டினம், நாகூர் இரண்டும் அடுத்ததுள்ள நகரங்களாகும். நாகர்கள் குடியேறி வாழ்ந்ததால் இது “ நாகபட்டினம் ” எனப் பெயர் பெற்றது.
 
கடற்கரையை அண்மித்த பகுதியாக நாகபட்டினம் உள்ளமையால் இது ஒரு துறைமுகப் பட்டினமாகும். பிறநாட்டு வணிகர்கள் இந்தத் துறைமுகத்தில் வந்திறங்கி வியாபாரம் செய்து வந்தமையால் நாகபட்டினம் துறைமுகம் எந்நேரமும் பரபரப்பானதொரு துறைமுகமாகவே இருந்து வந்துள்ளது.
 
நாகபட்டினம் எனும் பெயர் படிப்படியாக மருவி “ நாகை ” என்றாயிற்று. ஊர் நாகை, கோயில் – காரோகணம். எனவே நாகைக்காரோகணம் எனும் பெயர் நிலைத்த பெயராயிற்று.  நாகைக்காரோகணம் திருக்கோவிலின் சிறப்புக் காரணம் பலவுண்டு. புண்டரீக முனிவரை இறைவன் தன் மேனியில் ஆரோகணம் செய்துகொண்ட பெருமைபெற்ற பதி இது. சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றான இத்தலம் ஆதிபுராணம், சிவராததானி, பார்ப்பதீச்சரம், அரவநகரம் எனப் பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. அகத்தியருக்குத் திருமணக்கோலம் காட்டியதும், அதிபத்த நாயனார் அவதரித்ததுமாகிய சிறப்புக் கொண்ட தலம் நாகைக்காரோகணம். 
 
 
இறைவன் : காயரோகணேஸ்வரர், ஆதிபுராணர்
இறைவி : ஸ்ரீ நீலாயதாகூஷி அம்பாள்
தலமரம் : மா
 
சம்பந்தர், அப்பர், சுந்தரா் மூவராலும் பாடப்பெற்ற ஸ்தலம். அருணகிரிநாதர் தனது 16 வரிகள் கொண்ட திருப்புகழின் ஈற்றடியில் “ நாலுதிக்கும் வெற்றிகொண்ட சூரபத்மனைக் களைந்த நாகபட்டி னர்த்தமர்ந்த பெருமாளே ” என நாகைக்காரோகணத்தைப் பெருமைப் படுத்தியுள்ளார்.
 
கோவில் வளாகத்தினுள் நுழைந்தவுடனே நம் கண்ணெதிரே மூடிய மண்டபத்தினுள்ளே உள்ள சுதை நந்தி அழகிய வர்ணத்தில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பது தெரிகிறது. நந்தியுள்ள மண்டபத்தின் இரு புறமும் – சற்றுத் தள்ளி – நந்தவனம் காணப்படுகிறது. நந்தவனத்திற்கும் சுதை நந்திக்கும் இடைப்பட்ட அகன்ற பாதை கோபுர வாசல்வரை நீண்டு செல்கிறது. சற்று முன்னே கோவிலின் இடது புறமாக (தெற்கு நோக்கியபடி ) அம்பாள் சந்நிதி தனியாகவும், வலது புறமாக ஆலமர் கடவுளான தெட்சணாமூர்த்தி நான்கு முனிவர்களுக்கும் உபதேசிக்கும் நிலையில் தனிச் சந்நிதானத்திலும் உள்ளனா். இன்னமும் சற்று முன்னே போனால் நடுவே எண்கோண அமைப்புடனான மண்டபத்தில் பலிபீடமும் நந்தியும் காணப்படுகின்றன. எண்கோண மண்டப மேற்தளத்தில் நடுவே சுவாமி – அம்பாளும், வலதுபுறம் பிள்ளையார், இடது புறம் முருகன் சுதைச் சிற்பங்களாக நின்ற திருக்கோலத்தில் உள்ளனா். இந்த எண்கோண மண்டபத்தின் வலதுபுறம் சற்று தள்ளி ஸ்தல விருட்சமான “ மா ” மரம் கிளை பரப்பி நிற்கிறது.
 
அடுத்து 28 தூண்கள் கொண்ட அகன்ற ஒரு மண்டபம் காணப்படுகிறது. மண்டப முகப்பு வாசலின்மேலே, நடுவே சுவாமி – அம்பாள் இடபத்திலும், வலதுபுறம் கணபதி எலி வாகனத்திலும், இடதுபுறம் அம்பாள் தனியாக அன்ன வாகனத்திலும், அடுத்து முருகன் மயில் வாகனத்திலும் உள்ள சுதைச் சிற்பங்கள் புதுவர்ணம் தீட்டப்பட்டு மெருகேற்றப்பட்டுள்ளன.
 
கண்ணெதிரே கிழக்குப் பார்த்தபடியான ஐந்து நிலைக்கோபுர வாசல் தெரிகிறது. கோபுர வாசல் முன்பாக செப்புக் கவசமிடப்பட்ட பெரிய கொடிமரமும், பரந்துவிரிந்த பெரிய முகப்பு மண்டபமும் உள்ளது. 36 உயர்ந்த தூண்களையும், 16 உயரம் குறைவான தூண்களுடன் மிகப் பெரிய அமைப்பைக் கொண்டுள்ளது அம்மண்டபம் . இம் மண்டபத்தின் இடது புறத்தில் 4’ வரை உயரம் கொண்ட நீண்டதும் அகலமானதுமான தொட்டியொன்று காணப்படுகிறது. நாகபட்டினம் கடற்கரையை அண்டிய பிரதேசமாயினும் தரவைப்பகுதி நெல் விளைச்சல் கூடிய பகுதியாகும். அதனால் விளைச்சலின் முதல் நெல்லை விவசாயிகள் மூடையாக இந்தத் தொட்டியினுள் கொட்டி விடுகிறார்கள்.
 
கோபுர வாசல் தாண்டி உள்ளே சென்றால் (வலஞ்சுழியாக ) கிழக்குச் சுற்றில் சூரியன், நால்வர், சுந்தரா் (தனியாகப் பரவையாருடன் ) உள்ளனா். தென் சுற்றுச் சுவரோடு இணைந்தபடியான ஒரு நீண்ட திண்ணைப் பகுதியும், சுவரில் தசரதச் சக்கரவர்த்தி இறைவனை வேண்டுதலும் - இறைவன் வரம் அருளுவதும் சித்திரமாக வரையப்பட்டுள்ளது. மேற்கில் மாவடிப்பிள்ளையார், கார்முகீஸ்வரா், தொடர்ச்சியாக ஏழு லிங்கங்களும், வள்ளி – தெய்வானை சமேத சுப்பிரமணியரும் வீற்றிருக்கின்றனா். சிவன் கோவில்களில் பொதுவாகச் சுப்பிரமணியர் காணப்படும் இடத்திலல்லாது கருவறைக்கு சரி பின்புறமாக கிழக்கு நோக்கியபடி உள்ளார் . தொடர்ந்தும் வைரவர் , விசுவநாதர், ஸ்ரீமகாலெட்சுமி ஆகியோர் உள்ளனா். வட சுற்றில் அறுபத்து மூவரும் இந்திரன், எமன், நிருத்தி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், இச்சா – கிரியா – ஞான சக்திகள், பிள்ளையார் உள்ளனா்.
 
 
வடகிழக்கு மூலையில் (கிழக்குச் சுற்றின் இடது புறம் ) ஸ்ரீ மகா கால பைரவர் உள்ளார். சனீஸ்வரனுக்குத் தனிச்சந்நிதி மேற்குப் பார்த்தபடி காணப்படுகிறது. நவக்கிரகங்களுக்கான சந்நிதி தனியாக உண்டு. இதில் வரிசைக்கு மூன்றாக (கூடுதலான இடைவெளி விட்டு) மூன்று வரிசைகளில் ஒரே திசையை  - சுவாமியை நோக்கியவாறு உள்ளனா்.
 
கோபுரத்தில் திருப்பாற்கடலைக் கடைந்தமை , நால்வர், காளியோடு நடனமாடும் சிவன், மார்க்கண்டேயருக்காக யமனைக் காலால் உதைத்தமை, தென்முகக் கடவுள் நால்வருக்கும் உபதேசித்தமை என நிறையச் சிற்பங்கள் அழகிய வர்ணத்தில் ஜொலிக்கின்றன.
 
நடராஜர் சபையை வணங்கி உள்வலத்தை முடித்து 5 படிகள் மேலேறிச் சென்றால் வலதுபக்கம் பிச்சாடணர், நடராஜர் – சிவகாமி எனப் பல உற்சவ மூர்த்தங்கள் உள்ள அறை கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. துவார பாலகர்களைத் தொழுது வாயிலைக் கடந்தால் நேரே மூலவர் தரிசனம். உயர்ந்த லிங்கபாணம் – நிறைந்த அலங்காரத்துடன் அருள் பாலிக்கிறார் காயாரோகணா். மூலவரின் பின்புற சுவரை அண்மித்தபடி பார்வதி – பரமேஸ்வரன் – மணமக்களுக்கான முழுமையான அலங்காரத்துடனான திருமணக் கோலத்தில் அருள்பாலிக்கின்றனா். அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டிய அற்புதமான திருமணக் காட்சி. இது.
 
கருவறையின் இடதுபுறம் தெற்குப் பார்த்தபடியான சந்நிதியில் ஈசன் – அம்பிகையின் இன்னுமொரு திருமணக்கோலக் காட்சி. ஈசனின் இடது கை அம்பிகையை அணைத்தபடியிருக்க, தொங்கவிடப்பட்ட வலது கையினை நந்தி நக்கியபடியான ஒரு காட்சி புதுமையாக உள்ளது. ஈசன் – அம்பிகை – நந்தி வழமைக்கு மாறான பெரிய தோற்றத்துடன் உள்ளது. மூலவரைச் சுற்றிய தனிப்பிரகாரச் சுற்றின் கோஷ்டத்தில் தெட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரமன், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரா், பிச்சாடணர் உள்ளனா். இந்தத் தனிப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரா் வழமைக்கு மாறாக கருவறையின் வலது பக்கமாக உள்ளார். கருவறையின் வலது பக்கம் தியாகராஜர் சந்நிதியும் காணப்படுகிறது.
 
மூலவரின் கருவறைக்கு முன்பாக உள்ள தம்பத்திற்கு இடமாக அம்பாளுக்கான தனிச் சந்நிதி தெற்குப் பார்த்தபடி உள்ளது. பின்புறமாகக் கருவறையும் , முன்புறம் 12 தூண்களுடனான மண்டபமும் உள்ளடங்கிய சந்நிதி இது. மண்டபத்திற்கு முன்பாக அம்பாளுக்கான தனிக்கொடிமரம் உண்டு. அம்பாளின் கருவறையில் நின்ற திருக்கோலத்தில் நிறைந்த அலங்காரத்தில் ஸ்ரீ நீலாதாட்கூஷி அம்பாள் அருள் பாலிக்கிறார். மண்டபத்தின் இடது பக்கச் சுவரில் காளி நடனமாடும் காட்சியும், புண்டரீக மகரிஷி சிவவணக்கம் செய்யும் காட்சியும் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. அதேபோல வலது பக்கச் சுவரில், தனது உள்ளங்கால் தெரியும்படியாக சிவன் காலைத் தூக்கி நடனமிடும் காட்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அம்பாள் கருவறையின் முன் மண்டபத்தில் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு நந்திகள் காணப்படுகின்றன. சற்றுப் பெரிய உருவத்தோடு முன்புறமாக உள்ள நந்தி தனது தலையை வலது புறம் திருப்பியபடி உள்ளதையும், பின்புறமுள்ள நந்தி உருவில் சிறியதாகவும் காணப்படுகிறது.
 
நாள்தோறும் ஆகம முறைப்படியான ஆறுகால பூசைகளுடன், சிவராத்திரி – பிரதோசம் – நவராத்திரி – கேதாரகௌரி விரதம் போன்றவை அனைத்தும் சிறப்புற நடைபெறுகின்றன. வைகாசி மாதத்தில் வரும் எம்பெருமானின் பிரமோற்சவம் – ஆடி மாதத்தில் வரும் அம்பிகையின் மகோற்சவம் ஆகியவை ஊரின் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதிபத்த நாயனாருக்கு இறைவன் அருள் செய்த விழா ஆவணியில் நடைபெறுகிறது. அதிபத்த நாயனார் வாழ்ந்த இடமான செம்படவர் சேரி – தற்போது நம்பியாங்குப்பம் என்றழைக்கப்படுகிறது. நாகைக்காரோகணத்தின் தல புராணத்தை மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ளார்.
 
“ ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள்நல்கிச்
  சேணின்றவர்க் கின்னஞ் சிந்தை செய வல்லான
 பேணி வழிபாடு பிரியா தெழுந் தொண்டர்
 காணுங் கடல் நாகைக் காரோகணத்தானே ”
-சம்பந்தர்-
 
“ நிறைபுனல் அணிந்த சென்னி நீள்நிலா அரவஞ்சூடி
 மறையொலிபாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன்
 கறைமலி கடல்சூழ் நாகைக்காரோகணங் கோயில் கொண்ட
 இறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பமாமே ”
-அப்பர்-
        நன்றி: ஞானச்சுடர் , ஆனி 2015
 
அடுத்தவாரம் : “ திருவதிகை ” அப்பரின் தமக்கையரான திலகதியார் தங்கியிருந்து திருத்தொண்டு புரிந்த திருக்கோவில் “ திருவதிகை ”

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
இன்றைய நாளில் வல்வையில் – கடலில் மிதந்தார் யோகரெத்தினராசா
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2024 (வெள்ளிக்கிழமை)
கரப்பந்தாட்டப் போட்டி - ரேவடி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2024 (புதன்கிழமை)
வல்வை சிவன் கோவில் தீர்த்தத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2024 (திங்கட்கிழமை)
VEDA மார்கழி மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2024 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் வல்வையில் – பாக்குநீரிணையக் கடந்திருந்தார் நவரத்தினசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2024 (திங்கட்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் மகோற்சவ விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வல்வை சிவன் கோவில் பஞ்சரத பவனி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2024 (ஞாயிற்றுக்கிழமை)
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2024 (சனிக்கிழமை)
முன்பள்ளியில் பொதுசுகாதார பரிசோதகரால் விளக்கமளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை சிவன் கல்யாணத்திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2024 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2024 (புதன்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2024 (புதன்கிழமை)
பூச்சிய கழிவு தின செயற்றிட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2024 (செவ்வாய்க்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - கனகலிங்கம் இந்திரலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/03/2024 (திங்கட்கிழமை)
VEDA கார்த்திகை மாத அறிக்ககை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/03/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வெதுப்பகத்துக்கு சீல் வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/03/2024 (சனிக்கிழமை)
புகையிரத ஆசன முன்பதிவு Online இல் மட்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2024 (வெள்ளிக்கிழமை)
ரேவடி கடற்கரையோரம், மீன் சந்தைப் பகுதி சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2024 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - சண்முகராசா குமாரதாஸ் (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2024 (வெள்ளிக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பு - அமரர் அருட்செல்வம் இராமநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2024 (புதன்கிழமை)
வல்வை பெண்கள் கரப்பந்து தொடர் - Valvai Black Tigers வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2024 (செவ்வாய்க்கிழமை)
முன்பள்ளிகளிற்கு வர்ணக்கழிவுக் கூடைகள் விநியோகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2024 (செவ்வாய்க்கிழமை)
விளையாட்டுப் போட்டியில் பீரங்கி வண்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)
கடற்கரை கபடி போட்டியில் சைனிங்ஸ் அணி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)
மனநல மட்டத்தில் (MHQ) 2வது மிக உயர்ந்த தரவரிசையில் இலங்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Mar - 2024>>>
SunMonTueWedThuFriSat
     12
3
4
567
8
9
10
1112
13
141516
1718192021
22
23
24
25
2627
28
2930
31      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai