கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே - சோ.செ. தேய்வச்சந்திரன்.
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2019 (புதன்கிழமை)
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே... 38 திருக்கோயில்களால் ஊரைக் கட்டமைத்தவர்கள் வல்வெட்டித்துறை மக்கள்.
இவ்வருடம் வல்வெட்டித்துறையின் வரலாறும் மிகவும் உயர்திறனில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. உயிர்த்த ஞாயிறு விடுமுறையுடன் பல குடும்பங்கள் சொந்த ஊரை தரிசிக்கும் பாக்கியம் ஊர் செபஸ்தியரால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளீர்கள்.
புனித செபஸ்தியார் ஊர் மண்ணில் பிதிஸ்ட்டை செய்யப்பட்ட 300 வது வருடத்தை நிறைவு செய்த கொண்டாட்டங்கள் ஆரம்டபிக்கபட்டுள்ளது. அக் கோயிலின் திருச்சபை வழமை போல் ஊர் மக்களுடன் இணைந்து கொண்டாட்ங்களையும் வல்வெட்டித்துறையின் வரலாறையும் பதிந்து செல்ல உள்ளார்கள்.
இவ்வருடம் வழமை போல் 38, 40 வருடங்களுக்கு பிறகும் ஊர் மண்ணில் கால் பதிக்கும் பாக்கியத்தை பெற்றவர்கள் முடிந்தளவு ஊரின் 38 கோயில்களை தரிசித்துவிட்டு திரும்புங்கள். இவ்வருட இந்திர விழாவில் குச்சம் சமுதாயத்hல் வழமை போல் தொங்கு பாலம் கோடுவதை நிறுத்துவதாக அறிகின்றோம். தங்கவேல் அண்ணாவின் இறுதி கிரிகைகளுக்கு முன்னர் கூடி எடுக்கப்பட்ட முடிவது. அன்றைய மனநிலையில் குச்சம் காமாழை மக்கள் எடுத்த முடிவு மிகவும் சரியானது.
ஆனால் தங்கமண்ணாவின் உடல்தான் எங்களை விட்டு இறைவனால் திரும்ப பெறப்பட்டது.. இது அம்பிகை அம்மா கருத்தரித்த அன்றே இறைவளால் கொடுக்கப்பட்ட வரம். வழமையை மாற்ற தங்கமண்ணாவின் ஆத்மா உங்களின் முடிவை ஏற்றுக்கொள்ளாது.
இன்னும் நிறைவான கால அவகாசம் உள்ளது மீள் ஆலோசளைகள் செய்து தொங்கு பாலத்தை போட்டு சிறவர் நிகழ்வுகள் அல்லது பக்கி கானங்கள் அல்லது தொங்கும் பூந்தோட்டமாக அமைக்கலாம். கற்பனைத்திறனுக்கும் குச்சம் மக்கள் சழைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபியுங்கள்.
இவ்வருடம் வல்வெட்டித்துறை சனசமூக சேவா நிலையம் தனது 75வது பவள விழாவை கொண்டாடிக்கொண்டு இருக்கின்றது. எம் ஊரின் கௌரவம் காப்பற்றப்பட்டதில் இந்த நிலையத்திற்கும் பெருபங்கு இருக்கிறது. புலம் பெயர்ந்து சென்றவர்கள் அனைவரும் விழாவில் கலந்து வல்வையரின் வரலாற்றை சிறப்பாக எழுதிவிட்டு வாருங்கள்.
நாம் இங்கிலாந்து தேசத்தில் காலநிதி இராஜேந்திரம் அவர்களால் வல்வை அரங்கம் அமைக்கும் முயற்சியில் இன்று வரை தோற்றுப் போனவர்கள். நாளை ஒரு நாள் அம் முயற்சியில் கண்டிப்பாக வெற்றிபெறுவோம்.
ஏமது ஊரில் திருவில் திடலுக்கு அன்மையில் 21 பரம்பு காணி சிறு வீடு சுற்று மதில்களுடன் நீண்ட நாட்க்கள் விற்கப்படாமல் இருக்கின்றது. அதை புலம்பெயர் மக்கள் குறைந்தது 100 பேராவது இணைந்து வாங்கி வல்வை உள்ளக அரங்கு அமைக்கலாம். ஏல்லா கழகங்களும் இணைந்து அக்காணியை வாங்கி செயல் வீரன் யரில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைக்கலாம்.
நாம் 25 லட்ச்சம் செலவில் சிதம்பாராவின் விஞ்ஞான கூடம் புனரமைத்தவர்களுக்கு 21 பரப்பு காணிவாங்குவது பெரியவிடையஅல்ல.
உலக வரலாறு ஒரு ஊரின் திருவிழாவுக்காக 700 மக்கள் சென்றார்கள் என்று வரையும் பொழுது அம்மக்களால் என்ன சாதித்தார்கள் என்பதையும் வரலாறு பதிந்து வைக்கும். தீருவில் இளைஞர்கள் றெயின்போ விளையாட்டுக்கழகங்ளின் பெருமைக்கரிய இவ்வாண்டின் வருடாந்த விளையாட்டு விழாக்களால் இத்தனை வருடங்களாக கழகங்களை கட்டிக்காத்த பெருமையில் வல்வை வாசம் மேலும் நறுமணம் கொள்கின்றது.
இவ்வாண்டு எம் முத்துமாரியின் கும்பாவுசேகம் நிறைவெய்தி நிறைய புலம்பெயர் வல்வை மக்களை வரவைத்ததில் நிர்வாக சபையினருக்கும் தொண்டாற்றிய அம்பாள் அடியார்களுக்கும் பங்குண்டு. இவ்வருடம் விழாவின் கொடித்தம்பபூசை வசந்தமண்டப பூசைகள் நேரடி ஒளிபரப்புக்ள் ஊர் இணையத்தளங்களில் இன்னும் வரவில்லை நிர்வாகசபை முடிந்தால் முயற்சி செய்யவும்.
இவ்வருடம் விழாவுக்கு கோயில் சுற்று மதிலுடன் போடப்பட்ட பந்தல் புலம்பெயர்ந்து ஊர் வராத மக்களையும் மனநிறை செய்த பெருவிடையம்.
பொது மகனின் ஆலோசளையை ஏற்ற நிர்வாகசபைக்கு நிறைவான நன்றிகள்.இவ்வருடம் கோயில் உள் வீதி வெளி வீதி உட்பட சுமார் 38 வீடியோ கமேராக்கள் பொருத்தப்பட்டு விழா முழவதும் நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஆலோசிக்கப்பட்டது. இவ்விடையத்தில் ஆர்வம் உள்ள அம்பாள் அடியார்கள் அல்லது புலம்வெயர்ந்த நட்புகுழுக்கள் அப்பணியை நிறைவு செய்து அம்பாளின் கடாட்சம் பெறுங்கள்.
நம் வரலாற்றில் 2009 தேசியத்தின் மௌனத்துக்கு பிறகு சொந்த விட்டு முற்றத்தை மிதித்தவர்களால் நாம் தோற்றுப்போகவில்லை. வல்வைமண் அன்றும் இன்றும் என்றும் உயிர்ப்புடன்தான் இருக்கும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.