அலை ஏறி வந்த கோடியாக்கரை மாரித்தாய் இன்று புன்னை மரத்துடன் வீற்றிருந்து அருள் ஆசிதருவாள்
- சோ.செ. தேய்வச்சந்திரன்.
பிரசுரிக்கபட்ட திகதி: 18/04/2019 (வியாழக்கிழமை)
முதியோர்களை மதித்து மூத்தவர்களை கௌரவத்துடன் வாழ வைத்த சமுதாயம்தான் நாங்கள். சொல் வழக்கில் நிறைய பழங்கதைகள் நடைமுறை செயல் பாடுகளை கேட்டு வனர்ந்த படியால் இத்தனை உயரங்களை தொட முடிந்தது.
ஏன் தந்தையை வளர்த்த பூட்டி அவர்கள் அம்பாள் சன்னதியில் வழமையான பூசைகள் முடிந்த பிறகு கொடித்தம்பத்துக்கு அருகில் அமர்ந்து மூச்சு பயிற்சி தியானங்களை செய்வார். அவர்கள்தரான் திருவிழாக்காலம் முழதம் செய்யப்பட்ட பிரத்தனைகளுக்கு அம்பாள் தேர்த்திருவிழாவின் இரவு புன்னை மரத்தில் அமர்ந்நு இன்று அருளாசி வழங்குவார் என்று சொன்னது என்நினைவில் நிற்கின்றது.
ஏனக்கு பூட்டியின் ஆசிர்வாதத்தால் அம்பாள் புன்னை மரத்தில் வழங்கி அருளாசியை திருவிழாக்காலங்களில் பெற்றிருக்கின்றேன். தேர் அன்று இரவுத்திருவிழாவுக்கு சொற்ப ஆட்க்கள்தான் வருவார்கள்.
வெளியூர் மக்களிடம் எந்தக் கோயில் தேர் என்றால் போய் தரிசனம் செய்யும் பழக்கம் இருக்கின்றது. புலம்பெயர்ந்து சென்ற வல்வை மக்கள் அனைவரும் முடிந்தால் இன்று இரவுத்திருவிழாவுக்கு சென்று உங்களுக்குரிய அருளாசிகளையும் வருகின்ற வருடம் இன்னும் இரட்டிப்பான வல்வை மக்கள் வரவேண்டும் என்ற பிரத்தனையையும் நிறைவு செய்து வாருங்கள்.
இன்றைய கால கட்டத்தில் நண்பர் ஒருவர் சொன்ன வாசகம் கோயில் திருவிழா என்றால் பாசன்சோதான் என்று. புலம்பெயர்ந்து வந்த மக்களும் சரி உள்ளுர் மக்களும் சரி தாங்கள் சழைத்தவர்கள் அல்ல என்பது உன்மையாக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் எம்மூர் இளைஞர்களும் மிகவும் மகிழ்வாகவும் இருந்ததை வல்வையூர் புகைப்படக் கலைஞர்கள் நிறைவாக அள்ளி கொட்டியிருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் ஞானா போட்டோவின் நன்றிகள்.
எம் ஊர் புகைப்படக் கலைஞர்களே நாளைய இந்திரவிழா வரலாற்று சிறப்பு மிக்கது எம் ஊரில் இன்னும் நூறு வருடங்களுக்கு பிறகும் எம் கௌரவத்தை வென்றெடுத்து வாழப்போகும் சமுதாயத்தின் ஆவணக்காப்பு.
பகதி பகுதியாக நின்று முழவதும் தொகுப்பு செய்ய வேண்டிய கடமைப்பாடு உங்களுடையது. அவற்றை பாதுகாக்க வேண்டியவர்கள் பாதுகாத்து கொள்வார்கள். புடம் எடுத்து உலகப பூரா அனுப்புவதும் அம்பாள் தொண்டுதான். தேசிய ஆவணக்காப்பகம் உங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை சமர்ப்பிக்கின்றதது.
2009 ல் தேசியம் தனது ஆயுதங்களைத்தான் மௌனித்தது. புலம்பெயர்ந்து திருவிழாவுக்கு சென்ற பக்கர்;களோ உங்கள் அகதி நாடு திரும்பும் பயணம் அம்பாள் துணை நிறபாள் இருந்தாலும் பாதுகாப்பான ஓய்வான பயணங்களாக அமைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் ஊர் திரும்பும் முன்னர் எங்களால் உருவாக்கப்பட்ட வல்வையர் ஒன்றியம் செயல்பாட்டர்களுடன் கலந்தாலோசித்து விட்டு வாருங்கள். இன்னும் ஒரு பத்து வருடங்களுக்குள் எம் வல்வையர் சமுதாயத்துக்கு பெரிதாக அத்திவாரங்களை அமைக்கா விட்டால் நாம் கட்டிக்காத்த பெருமைகள் எல்லாம் காற்றில் பறந்துவிடும்.
நாம் நாலாம் நூற்றாண்டுக்கு முன்னரே வாள் கொண்டு கரைகாத்த துறைமுகம் வைத்திருந்தவர்கள். வாள் வெட்டித்துறை என்ற பெயர் மருவி வல்வெட்டித்தறையாகியது. இன்று வல்வை என்று சுருங்கி றிற்கின்றது. நாளையும் பெயரில் மாற்றம் வரலாம். துயவு செய்து ஊரின் விளம்பரபடுத்தல்கள் ஆவணங்களை வல்வெட்டித்துறை என்று முழப்பெயரும் பாவிக்கும்படி தேசிய ஆவணக்காப்பவகம் பணிவுடன் வேண்டிக் கொள்கிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.