வல்வை ஆனந்த யோகாலயா யோகா நிறுவனத்தின் 3 வது ஆண்டு விழாவும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நேற்று இடம்பெற்றது.
தலைவர் திரு.S இராஜேந்திரன் (ஒய்வு நிலை பேராசிரியர்) அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக Dr .கெளரிபாலன் பண்டைய ஹதயோகா ஆசிரியர் (ஈஷா சத்குருவின் கீழ்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக இந்தியாவிலிருந்து வருகை தந்த ஆனந்த ஜோகாலயா நிறுவனத்தை சேர்ந்த யோககலைமாமணி திரு மணிகண்டன் வாசுதேவன் B.A, DYG,PGDYN,MSc(YOGA), யோகசிரோன்மணி செல்வி ஷாலினி BE(ECE), YIC, MSC, MPhil, PhD(YOGA), யோகமஹாரத்னா திருமதி துர்காதேவி BCOM,PGDYN,MSc(YOGA) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
நிகழ்வில் வல்வை யோகாலயாவின் ஆசிரியை திருமதி சியாமளா சிவநேசன் அவர்களின் மாணவர்களின் யோகா பயிற்சிகள் காண்பிக்கப்பட் டன.
நிகழ்வின் இறுதியாக கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.