அன்னை தெரேசா முன்பள்ளி நேற்றிலிருந்து றோ.க.த.க பாடசாலையில் இயங்குகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2016 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி திறக்கப்பட்ட அன்னை திரேசா முன்பள்ளி நேற்றிலிருந்து வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலிருந்து இயங்கிவருகின்றது. நேற்றுக் காலை சுமார் 9 மணியளவில் சம்பிராயபூர்வமாக ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் ஒரு மண்டபத்தில் முன்பள்ளி ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அதிபர், வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் அன்னை திரேசா முன்பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அன்னை திரேசா முன்பள்ளியை வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடாத்துவதற்கு வடமராட்சி கல்வி வலய பணிப்பாளரின் அனுமதி பெறப்பட்டுள்ளதுடன், குறித்த முன்பள்ளியின் ஆசிரியைக்குரிய சம்பளத்தையும் வட மாகாண சபையினூடாக வழங்க கல்விப் பணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மூடப்படும் அபாயமுள்ள ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்குடன் அன்னை திரேசா முன்பள்ளி கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வீடு ஒன்றில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.