வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலையில் 2014 – 2015 ஆண்டிற்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. பிற்பகல் சுமார் 0230 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் தலமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில், விருந்தினர்களை மாணவர்களின் பாண்ட் வாத்தியங்கள் சகிதம் அழைத்து வரப்பட்டிருந்தார்கள்.
தொடர்ந்து பாடசாலையின் தையல் பாகர் அரங்கில் நடைபெற்ற இப்பரிசளிப்பு விழாவில் முதன்மை விருந்தினாராக வைத்தியகலாநிதி கலைச்செல்வி தீலீபன் (பிரதேச வைத்திய அதிகாரி, பிரதேச வைத்தியசாலை, வல்வெட்டித்துறை) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
மாலை 0630 மணிவரை இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாணவர்களின் ஆங்கில நாடகம் உட்பட்ட பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன. 2014 – 2015 ஆம் ஆண்டின் பல்வேறு துறைகளில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசில்கள் விழாவின் இறுதியில் வழங்கப்பட்டிருந்தன.
முன்னாள் பாடசாலை அதிபர் திரு.சிவநாதன், வல்வையின் ஏனைய பாடசாலை அதிபர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் எனப் பலரும் இன்றைய விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.