முதலாவது அறிவிப்பாளர், முகாம்களுக்கு தமிழ் பெயர் சூட்டியவர் அதிரூபசிங்கம் மாஸ்டர்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2017 (சனிக்கிழமை)
நேற்று முன்தினம் காலமான வல்வெட்டிதுறையில் சகலாராலும் அறியப்பட்ட அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் மிகச் சிறந்த அறிவிப்பாளர். தமிழில் சிறந்த புலமை பெற்றவர்.
80 களின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகளால் யாழின் வடமராட்சிப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஒலி மற்றும் ஒளி பரப்புச் சேவையில் முதலாவதாக அறிவிப்பினை மேற்கொண்டவர் அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் எனத் தெரிவிக்கபடுகின்றது.
அத்துடன் இதே காலப் பகுதியில் வடமராட்சியில் இயங்கிய விடுதலைப் புலிகளின் முகாம்கள் “கலிபோர்னியா”, “சான்பிரான்சிஸ்கோ” என ஆங்கிலப் பெயர்களிலேயே விடுதலைப்புலிகளால் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தது.
இவ்வாறு முகாம்களுக்கு வழங்கப்பட ஆங்கிலப் பெயர்களுக்கு மாற்றக காரணத்துடன் கூடிய தமிழ் பெயர்கள் அமரர் அதிரூபசிங்கம் அவர்களாலேயே வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வல்வெட்டியில் அமைந்திருந்த முகாமுக்கு “விடிவெள்ளி” (வல்வெட்டிப் பகுதியில் இருந்து சூரிய உதயத்தை பார்க்க முடியாது, நட்சத்திரங்களையே பார்க்க முடியும்), தொண்டைமனாறில் அமைந்திருந்த முகாமுக்கு “வைகறை” (சூரிய உதயம் தெரிவதால்), நெல்லியடில் அமைந்திருந்த முகாமுக்கு “அதிரடி” போன்றவை அமரர் அதிரூபசிங்கம் அவர்கள் வழங்கிய பெயர்களில் சில என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னரே ஏனைய பகுதிகளுக்கும் தமிழ் பெயர்கள் மாற்றம் வியப்பித்தது எனவும் மேலும் கூறப்படுகின்றது.
மேலும் இலங்கை இராணுவத்தால் 87 இல் யாழ் வடமராட்சியில் மேற்கொள்ளப்பட்ட "Operation Libration" இராணுவ நடவடிக்கைக்கு பின்னாளில் "விடுதலை விடுவிப்பு" எனப் பெயர் சூட்டியவரும் இவரே எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் (நடுவில் இருப்பவர்) 4 ஆவது உலகத் தமிழராச்சி மாநாட்டிற்கு அன்னபூரணி கப்பலில் அறிவிப்பாளராக சென்ற போது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.