கடும் உஷ்ணம் மேலும் 2 வாரங்கள் - வளிமண்டலவியல் திணைக்களம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2021 (திங்கட்கிழமை)
தற்பொழுது நிலவும் கடும் உஷ்ணக் காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை சூரியன் பூமிக்கு நேராக உச்சம் கொடுப்பதே இந்த உஷ்ணத்திற்கான காரணமாகும்.
உஷ்ணம் காரணமாக நீர்நிலைகளில் உள்ள நீர் ஆவியாகி வளிமண்டலத்துடன் ஒன்று சேரும். இந்நாட்களில் காணப்படும் நிலமைக்கு அமைய மழைக்கான முகில் விருத்தியடையும் சாத்தியம் குறைவாகும்.
இதனால் மழை பெய்வதற்கான சாத்தியம் இல்லை. காற்றும் குறைவடையும் வாய்ப்பு உள்ளது. இந்த வெப்பக் காலநிலையில் கூடுதலாக வியர்வை சிந்தும் போக்கு காணப்படும்.
இரண்டு வாரங்களில் இந்த நிலமை குறைவடையலாம். உடலை வருத்தக்கூடிய வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் கூடுதலாக நீர் அருந்துமாறும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.