சதுப்புநிலங்களை பாதுகாக்கக் கூடியனவும், உவர் நீர்த் தன்மையைக் கட்டுப்படுத்துக்கூடியனவுமான கண்டல் தாவரங்களை தொண்டைமானாறு நீரேரியில் நாட்டும் முயற்சி ஒன்றில் வல்வை நகரசபை உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக அண்மையில் சதுப்புநில மரங்கள் வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த தென்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வரவழைக்கப்பட்டு குறித்த நீரேரிப் பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கைத் தீவில் மிக நீண்ட கடல் நீரேரியான தொண்டைமானாறு சுண்டிக்குளம் கடல் நீரேரியைக் கொண்டமைந்த யாழ் தீபகற்பம், கடந்த காலங்களில் ஏராளமான சதுப்பு நிலத் தாவரங்களை குறிப்பாக கண்டால் தாவரங்களை தன்னகத்தே கொண்டமைந்திருந்தது.
ஆனாலும் இவை சதுப்பு நிலத் தாவரங்கள் தொடர்பான அறியாமை மற்றும் உள்நாட்டு யுத்தத்தின் போது ஏற்படுத்தப்பட்டிருந்த தடை காரணமாக அன்றாட சமையல் தேவைகளுக்காக மிகப் பெருமளவில் இவை அழிக்கப்பட்டன.
யாழில் உள்ள உள்ளூர் அரச அமைப்புக்கள் இதுவரை இவற்றை மீள் உருவாக்குவதற்கு எதுவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் இலங்கை கடற்படையினர் ஏராளமான கண்டல் தாவரங்களை யாழ் கடல் நீரேரிப் பகுதியில் நட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவின் கீழ் 2015 ஆம் ஆண்டின் பின்னர் தொடங்கப்பட்ட சதுப்பு நில பாதுகாப்புத் திட்டங்கள் உலகளாவிய வெற்றிகரமான திட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் விளைவாக, சதுப்பு நில பாதுகாப்பில் (Mangrove Conservation) அதிக முன்னேற்றம் அடைந்த ஒரு நாடு என இலங்கை பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொண்டைமானாறு கடல்நீரேரியில் ஆய்வு
பொன்னாலை கடல்நீரேரியில் கடந்த வருடம் நாட்டப்பட்ட சதுப்புநில மரங்கள்
கடந்த மாதம் யாழ் கடல்நீரேரியில் சதுப்புநில மரங்கள் நாட்டும் இலங்கை கடற்படையினர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
kunes (srilanka)
Posted Date: August 19, 2018 at 13:17
இதுவும் நல்ல வேலைதான். ஆனால் முதலில் கரும்பாவளி தொண்டைமானாற்றில் கொட்டப்படும் குப்பையை நிறுத்தி அதை அகற்ற வல்வை நகரசபை முயற்சி எடுக்கட்டும்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.