கருத்தரங்கில் சான்றிதழ்பெற்ற முச்சகரவண்டி ஓட்டுனர்களே சேவையில் ஈடுபடமுடியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2016 (புதன்கிழமை)
வடமாகாண மீன்பிடி போக்குவரத்து, வர்த்தக வாணிபம் கிராம அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சினால் வழங்கப்படும் சான்றிதழ்களைப் பெற்றவர்களே இனிமேல் முச்சக்கர வண்டி பயணிகள் சேவையில் ஈடுபடமுடியும் என நேற்று வல்வையில் இடம்பெற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வல்வை நகராட்சி மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள்களிற்கான 'பயணிகள் சேவையில் ஈடுபடுகின்ற ஓட்டுனர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள்' என்னும் தலைப்பில் கருத்தரங்கு இடம்பெற்றது.
கருத்தரங்கின் முடிவில், கருத்தரங்கில் கலந்து கொண்ட ஓட்டுனர்கள் அனைவருக்கும் சான்றிதழ் ஒன்று வழங்கப்பட்டது. இனிமேல் இந்தச் சான்றிதழ்களைப் பெற்றவர்களே பயணிகள் சேவையில் ஈடுபடமுடியும், சான்றிதழ்களைப் பெறத் தவறியவர்கள் யாழின் பிற இடங்களில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் கலந்து கொண்டு சான்றிதழ்களைப் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நேற்று வல்வையில் இடம்பெற்ற கருத்தரங்கு, யாழில் இடம்பெற்ற முதலாவது கருதத்தரங்காகும். இக்கருத்தரங்கு யாழின் பிற பகுதிகளிலும் இடம்பெறவுள்ளது.
வல்வெட்டித்துறை நகரப் பகுதியில் சுமார் 100 அளவிலான முச்சக்கர வண்டி உள்ளதென்பதும், நேற்றைய கருத்தரங்கில் கலந்து கொண்டு சுமார் 40 பேர் சான்றிதழ்களைப் பெற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கீழே படங்களில் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெறும் சில ஓட்டுனர்கள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.