இந்திய சினிமா வரலாற்றில் மிக அதிக செலவில் உருவாகும் தமிழ், தெலுங்கு படவுலகின் “பாகுபலி”
பிரசுரிக்கபட்ட திகதி: 26/06/2015 (வெள்ளிக்கிழமை)
அமெரிக்காவின் வெற்றி படங்களில் ஒன்றான “300” உடன் தொடர்புட்ட படம் ஒன்று, இந்திய சினிமா வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில் மிக அதிக பொருட்செலவில் உருவாகும் முழு நீள படம் என்ற சாதனையை ஏற்படுத்தவுள்ளது.
இரண்டு பகுதிகளாக உருவாகும் “பாகுபலி” (Baahubali) என்ற காவிய படமே “Tollywood" மற்றும் "Kollywood” ஆகிய தென்னிந்திய சினிமா துறைகளின் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.
வெளி உலகில் பொதுவாகப் பேசப்படும் இந்திய சினிமாவின் ஹிந்தி சினிமாத்துறையான Bollywood இல் இது தயாரிக்கப்படாததால், “பாகுபலி இன்னும் அதிகளவு உலகில் பேசப்படவில்லை.
17 மில்லியன் அமெரிக்க டொலர்களில் எடுக்கப்பட முந்தைய படத்தின் சாதைனையை முறியடிக்கும் வகையில், 40 மில்லியன் அமெரிக்க டொலர்களில் பாகுவலி தயாரிக்கப்பட்டு வருகின்றது என இப்படத்தின் இயக்குனர் S.S.ராஜமௌலி AFP க்குத் தெரிவித்துள்ளார்.
பாகுபலி என்றால் ஆங்கிலத்தில் “The One With Strong Arms“ என்று பொருள்படுவதுடன், இப்படம் இரண்டு சகோதர்கள் பழைய இந்திய அரச இராச்சியம் ஒன்றைக் கைப்பற்றுவதற்கான சண்டையில் ஈடுபடும் கற்பனை கதையைக் கொண்டமைந்ததாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.