ஏககாலத்தில் இரு மைதானங்களில் இடம்பெறும் கடற்கரை கரப்பந்தாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2018 (சனிக்கிழமை)
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக முன்னாள் உறுப்பினர் அமரர் ந.வைத்திலிங்கம் ஞாபகார்த்தமாக, வடமாகாண கரப்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கம் வடமாகாண ரீதியில் நடாத்தும் கடற்கரை கரப்பந்தாட்ட தொடர் இன்று காலை 9 மணியளவில் வல்வை சைனிங்ஸ் மற்றும் ரேவடி கடற்கரை மைதானங்களில் ஏக காலத்தில் ஆரம்பமானது.
இப்போட்டியில், வெளி மாவட்ட அணிகள் உட்பட்ட 30 ற்கு மேற்பட்ட விளையாட்டுக் கழகங்கள் வரை பங்கேற்கவுள்ளன.
இன்று புத்தூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் வல்வை A அணி வெற்றி பெற்றுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.