தற்போதய அசாதாரண சூழ்நிலைகளினால் நாட்டில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு இன்றைய தினம் இரண்டாம் கட்ட இரத்ததானமுகாமினை, வல்வை உதயசூரியன் கழகம் மற்றும் வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையம் இணைந்து, வல்வெட்டித்தித்துறை நகர சபை மரக்கறி சந்தை கட்டடத்தில் ஒழுங்கமைத்திருந்தனர்.
முதல்கட்டமாக கடந்த வாரம் நடைபெற்ற இரத்ததான முகாமில் 13 பேரும், இன்றை இரண்டாம் கட்ட முகாமில் கலந்து கொண்டு 16 பேருமாக, மொத்தமாக 29 பேர் இவ் இரத்த தான முகாமில் கலந்து கொண்டு தமது குறுதிக்கொடையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது
இன்னும் சிலர் தங்கள் குருதியினை தானம் செய்வதற்கு முன்வந்திருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் (கடந்த ஒரு வருடத்துக்குள் வெளிநாட்டுக்கு பயணம் செய்தவர்கள்) அவர்கள் தங்களின் குருதியை தானம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.