இன்று (04.10.2015) வல்வெட்டித்துறையில் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில், வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இந்த இரத்ததான முகாமில் பெண்கள் உட்பட 45 கொடையாளிகள் குருதிக் கொடை வழங்கியிருந்தனர்.
இன்றைய இரத்ததான முகாமின் விசேட நிகழ்வாக, மனித குலத்தின் உயரிய சேவையாகக் கருதப்படும் குருதிக் கொடை வழங்கிய அனைத்து கொடையாளிகளும் 'வாழ்த்து மடல்' வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். இவ்வாறான சம்பவம் இடம்பெறுவது இதுவே முதன் முறையாகும்.
எமது Valvettithurai.ORG யின் பிரதான அனுசரனையுடன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியின் மேற்பார்வையின் கீழ் இன்றைய இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.