வல்வை நகரசபைத் தலைவர் கருணானந்தராசா பற்றி...............
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2021 (புதன்கிழமை)
திரு. கோணலிங்கம் கருணானந்தராசா கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போட்டியிட்டு வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராக 27.03.2018 அன்று பதவி ஏற்றார்.
1987 ஆம் ஆண்டு திலீபனின் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வல்வை சனா சமூக சேவா நிலையத்தில் திரு.கோணலிங்கம் கருணானந்தராசா மற்றும் ஒருவர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தனர். அவ்விதம் உண்ணாவிரதம் இருந்த இவர்களை விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் அவர்கள் நேரில் வந்து சந்திதிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மிகவும் எளிமையான வாழ்க்கையினை மேற்கொண்டிருந்த வல்வை நெடுநாள் சமூக சேவையாளரான திரு.கோணலிங்கம் கருணானந்தராசா அவர்கள், கடந்த உள்நாட்டு யுத்த காலங்களில் வல்வையை விட்டு அகலாமல், வல்வையிலேயே தங்கி நின்று சேவை புரிந்த குறிப்பிடக்கூடிய ஓரிரு அரசியல் வாதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
76 வயதுடைய இவர். கடந்த வெள்ளிக்கிழமை கொரொனாவால் பீடிக்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் இன்றி, இன்று (11/08/21) காலை 10 மணியளவில் காலமானார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.