சுமார் 30 வருடங்களின் பின்னர் மாட்டு வண்டி சவாரிப் போட்டி ஒன்று யாழ் வடமராட்சியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. கரவெட்டி இளைஞர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு சோனப்பு சவாரித் திடலில் பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமானது.
போட்டியில் பல காளை மாடுகள் பங்கு கொண்டன. விலகல் முறையில் பல கட்டங்களாக போட்டி இடம்பெற்றது. ஒவ்வொரு கட்டங்களிலும் நான்கு காளை மாட்டு வண்டிகள் போட்டியிட்டன.
போட்டியைப் பார்வையிட ஆயிரக் கணக்கானோர் வடமராட்சியின் புற நிலப் பகுதியான சோனப்புவில் கூடியிருந்தனர். போட்டியில் ஈடுபட்ட வண்டி ஒன்று பார்வையாளர் கூட்டத்தை நோக்கி சென்றதில் இருவர் காயமடைந்தனர். மேலும் போட்டியில் ஈடுபட்ட வண்டி இரண்டில் இருந்து இருவர் தூக்கி வீசப்பட்டனர் .
மிகவும் சிறப்பாக இடம்பெற்ற இந்த நிகழ்வு மாலை வரை நீடித்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.