வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால், மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து ரூபா 27,50,000/- செலவில் ரேவடிக் கடற்கரை அமைக்கபட்ட ரேவடி சுற்றுலா மைய வசதிகளை வட மாகாண சபை முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இன்று பொது மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.
நிகழ்வு இன்று பிற்பகல் மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத் தலைவர் திரு.பிரசாத் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முதலமைச்சருடன், வட மாகாண சபை உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் உட்பட்ட வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண சபை செயலாலளர் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்றைய நிகழ்வின் காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.