சீனா கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி Long March-5b vehicle. ரொக்கெட் மூலம் கட்டுமான விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலைநிறுத்தி ரொக்கெட், மீண்டும் பூமிக்கு திரும்பியது.
அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை ரொக்கெட் இழந்தது.
18 டொன் எடை கொண்ட ரொக்கெட்டின் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்றும், எஞ்சிய பாகம் கடலில் விழும் என்றும் சீனா கூறியிருந்தது. அதன்படி, ரொக்கெட்டின் எஞ்சிய பாகம் நேற்று இலங்கைக்கு தென் மேற்காக, மாலைக்தீவுக்கு மேற்காக இந்து சமுத்திரத்தில் (Lattitude - 2.65° North, Longitude 72.47° East)விழுந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) இல் ஆய்வுகளை நடத்த அமெரிக்கா சீனாவை அனுமதிப்பதிக்கவில்லை. இந்நிலையில் சீனா தாம் ஒரு விண்வெளி நிலையத்தை (China's new space station) அமைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.