தேசிய ரீதியில் வென்ற சிதம்பர பளுதூக்கல் வீராங்கனைகளைப் பயிற்றுவிக்கும் மளாயன் பானுராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 03/10/2015 (சனிக்கிழமை)
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில் (All Island School Games 2015) வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரி மாணவிகள் மூவர் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றமை யாவரும் அறிந்ததே.
இந்த மூன்று வீராங்கனைகளையும் பயிற்றுவிப்பவர் பருத்தித்துறையில் 'மளாயன்' என்னும் பெயரில் உடற் பயிற்சி நிலையம் ஒன்றை நடாத்திவரும் திரு.பானுராஜா ஆவார். இவருடன் பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் திரு.சி.திவாகரும் 3 வீராங்கனைகளின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார்.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில் செல்வி தசாந்தினி இராமகிருஷ்ணன் 69KG போட்டியில் பங்கு கொண்டு 80KG பாரத்தை தூக்கி 3 ஆம் இடத்தையும், செல்வி கோ.ஜோகேஸ்வரி 58KG போட்டியில் பங்கு கொண்டு 70KG பாரத்தை தூக்கி 3 ஆம் இடத்தையும், செல்வி அ.சிந்து 62KG போட்டியில் பங்கு கொண்டு 58KG பாரத்தை தூக்கி 4 ஆம் இடத்தையும் பெற்றிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.