சிதம்பரா கணித வலையமைப்புக்கு தடைகள் - வல்வை மக்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2015 (திங்கட்கிழமை)
கடந்த நான்கு வருடகளாக முன்னேற்றகரமாக வளர்ந்து வந்த சிதம்பரா கணித வலையமைப்பு கடந்த நான்கு மாதங்களாக பிரச்சனைகளுக்கு மத்தியில் சிக்கித்தவித்து வருவதை இப்போது அறிந்து கொண்டேன். இதற்கு என்ன காரணம் என்று அறிந்த கொள்ள முயன்ற போது பல விடயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது.
ஒரு கல்வி சார்ந்த விடயம் புலம்பெயர் தேசத்தில் இவ்வளவு முன்னேற்றகரமாக நடந்து வந்ததாக இதுவரை இருந்ததாக அறியவில்லை. அது எமது ஊருக்கும் எமது தலைமைக்கும் நாம் ஏற்படுத்திக்கொடுத்த பெருமை.
தகவல் வெளியிடப்பட்டுள்ள குறித்த முகநூல் பக்கம்
அந்த பெருமையை நாம் எந்த அளவிற்கு காப்பாற்றப் போகிறோம் என்பது தான் எம் முன்னால் உள்ள கடமை. கடந்த நான்கு வருடங்களில் கணித வலையமைப்பை சேர்ந்தவர்கள் ஏதேனும் தவறுகள் விட்டு இருந்தால் அதை நாம் தட்டிக்கேட்கலாம்.
அப்படி ஏதேனும் நடந்து இருந்தால் அவர்களை ஊரவன் என்ற முறையில் நானும் சேர்ந்து கேட்டு இருப்பேன். என்ன காரணத்திற்காகXXXXXXXXXXXXXX இந்த அமைப்பிற்குள் புகுந்து இந்த அமைப்பை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டுமென்று முனைப்புடன் செயற்படுகின்றது.
ஒரு அமைப்பை உருவாக்கி அதை கடந்த நான்கு வருடங்களாக செம்மையாக முன்னோக்கி நடத்தி வந்த குமுவினரை எமது ஊர் சார்பாக தடங்கல்களை ஏற்படுத்தும் நபர்களை நாம் இனம் கண்டு அதை தட்டிக்கேட்காமல் விடுவோமாக இருந்தால் அது எமது ஊருக்கு இழைக்கும் பெரும் துரோகம்.
இதுவரை பெருமுயற்சி எடுத்து இத்தனை வருடங்களாக உருவாக்கிய இந்த கணித வலையமைப்பு கைமாறி தரம் தாழ்ந்து போனாலும் நாம் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டியவர்களாவோம்.
எனவே ஊரவர்களான நாம் இதன் உண்மையான காரணத்தை அறிந்து அதற்கான ஒரு தீர்க்கமான முடிவை நாம் எடுக்க தவறுவோமாக இருந்தால் நாமும் அதற்கு உடன்பட்டவர்களாவோம்.
முடிந்தவரை ஊரவர்கள் எல்லோர்க்கும் பகிரவும். எனது அடுத்த பதிவு உண்மையாக இதற்குள் என்ன நடந்தது என்றும் காரணம் யார் என்றும் வரும். கணித வலையமைப்பு தரம் தாழ்ந்து போனால் அதற்கு நாமும் ஒரு பொறுப்பு.
செந்தில்குமார் அருமைச்சந்திரன் என்பவரது முகநூலில் இன்றைய 05.10.15 பதிவிலிருந்து
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.