வல்வெட்டித்துறை வல்வை 21 நண்பர்கள் நடாத்தும், வல்வை விளையாட்டு கழகத்தின் தலைமுறைகள் கடந்த தலைவர் அமரர் மு.தங்கவேல் (தங்கப்பா) ஞாபகார்த்தமான "கணினி பயிற்சி நிலையம்"மானது, கிளிநொச்சி மாவட்டத்தின், பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பின்தங்கிய ஓர் கிராமமான பல்லவராயன் கட்டு எனும் கிராமத்தில், கடந்த 07.07.2019) மாலை 3.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குழும உறுப்பினர் திரு.பிரகலாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மங்கள விளக்கினை தங்கப்பாவின் நீண்டகால நண்பனும், பிரபலமான கரப்பந்தாட்ட வீரனுமாகிய திரு.தேவசிகாமணி (கட்டியப்பா), குச்சம் சரஸ்வதி ஆலயத்தின் தலைவர் திரு.ஞானவேல், வேலுப்பிள்ளை நிதியத்தின் நிறுவுனர் திரு.கஜேந்திரன், வல்வையின் பிரபல விளையாட்டுவீரர் திரு.சோ.கிருஸ்ணகுமார் (கிட்டிணியப்பா) மற்றும் குழுமத்தின் செயலாளர் திரு.க.அஜித் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
பின்னர் கணினி பயிற்சி நிலையத்தினை திரு.தேவசிகாமணி (கட்டியப்பா) அவர்கள் திறந்து வைத்தார். தலைமையுரையினை எமது குழும உறுப்பினர் திரு.பிரகலாதன் வழங்க, வாழ்த்துரைகளை வேலுப்பிள்ளை நிதியத்தின் நிறுவுனர் திரு.கஜேந்திரன், திரு.தேவசிகாமணி (கட்டியப்பா) மற்றும் SECDA நிறுவன தலைவர் சசி ஆகியோர் வழங்கினார்கள். பின்னர் நன்றியுரையினை குழுமத்தின் உறுப்பினர் திரு.சி.ஜிவிந்தன் அவர்கள் வழங்கினார். முதற்கட்டமாக 15 மாணவர்கள் தமது கணினிப் பயிற்சிகளை நேற்றய தினம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொடிய யுத்தம் நடைபெற்று பத்து ஆண்டுகளை கடந்தும் கூட இன்று வரை எந்த விதமான அபிவிருத்திகளும் அற்ற நிலையில் காணப்படும் குறித்த கிராமத்தில் வாழும் எதிர்காலச் சங்கதிகளின் அழிக்க முடியாத சக்தியான கல்வியை போதிக்கும் முகமாகவும், கணினி மயமாகிகொண்டிருக்கும் இவ்வுலகில், அவர்களையும் எதிர்நீச்சல் போடுவதற்கு தயார்படுத்தும் குறிக்கோளுடனும் எமது குழுமத்தில் முதலாவது கணினிப் பயிற்சி நிலையமானது, குறித்த கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.