வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2019 (புதன்கிழமை)
வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்றது. நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு அலுவலத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது, களப்பு குடிநீர் திட்டத்தை ஆரம்பிப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
யாழ் குடாநாட்டில் வசிக்கும் சுமார் 630,000 மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முகமாக பொறியியலாளர் குகணேஸ்வரராஜாவினால் முன்மொழியப்பட்ட இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது.
இந்நிலையில் இந்தத் திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அடுத்த மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடமாராட்சி களப்பு நன்னீர் திட்டத்தை ஆரம்பிக்க நிதியுதவி வழங்குவதற்கு அண்மையில் யாழ்பாணம் வந்திருந்த அமைச்சர் மனோகணேசன் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது. (தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.