நாம் அஞ்ச அல்ல, அஞ்சாது வாழ்பவர்கள் - சட்டத்தரணி கனக மனோகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/01/2019 (திங்கட்கிழமை)
“உலக நாடுகளே கண்டு அஞ்சும் யாழ் வல்வெட்டித்துறை தமிழனின் வரலாறு” என்ற நிகழ்வை 23-01-2019 அன்று லங்காஸ்ரீயில் கண்டேன், கேட்டேன். அது எனக்கு கட்டாயம் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்ற உள உந்தலை ஏற்படுத்தியது.
அஞ்சாமை பெருமைக்குரிய பெருங்குணம்.
ஓர்ப்பு என்பது ஆடவர்க்குரிய நாற்குணங்களில் ஒன்று. இதன் பொருள் ‘வீரம் சார் ஓர்மம்”.
அஞ்சாது வாழ்பவன் பெருங்குணன். “அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்” என்கிறான் வள்ளுவப் பெருந்தகை. எனவே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவதும் அருஞ் செயலே.
ஆனால் பிறர் அஞ்ச வாழ்வது கண்ணியர் செயல் அன்று. அது காடையர் தொழில். நரகாசுரனும் ஹிட்லரும் இடி அமீனும் கூட அடுத்தவர் அஞ்ச வாழ்ந்தவர்கள் தாம்! தீயரை அச்சுறுத்தும் தேவை உளது. ஆனால் தேயங்களைப் பயமுறுத்துவதால் லாபம் என்ன?
வல்வையர்களை வன்முறையை தன்முறையாகக் கொண்டவர்களாக காட்ட முற்பட்ட கைங்கர்யம் கண்டனத்துக்குரியது.
மேலும் அதில் தரப்பட்ட வல்வைக்கு பெருமை தந்த பெரு மக்களின் பட்டியல் முழுமையாக ஏற்புடையதல்ல.
“விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரமாவதில்லை” என்ற திசையிசைப் பாவடிகளுடன் இச் சிறு குறிப்பை நிறைவு செய்கின்றேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Capt.V.Sivajee (Australia)
Posted Date: January 29, 2019 at 03:24
Said to be perfect, specially second and third lines from the bottom.......hats off to you Mr.K.Manokaran, for frank and straight foward....Capt.V.Sivajee.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.