வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றம் 10 வது கலை இலக்கிய பெருவிழாவினை முன்னிட்டு, வருடாவருடம் நடாத்தும் கலை இலக்கிய போட்டிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ( நேற்றும் இன்றும்) யா/ றோமன் கத்தோலிக்க பாடசாலையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
போட்டிகளின் வரிசையில் சித்திரம், சங்கீதம், நடனம், தனிநடிப்பு, கவிதை, கோலம் மற்றும் மாலை கட்டுதல் போன்றன நடைபெற்றது. மேலும் குழு நடனம், நாடகம் மற்றும் சிறுகதை ஆகிய போட்டிகள் எதிர்வரும் 05/10/2019 (சனிக்கிழமை) யா/ றோமன் கத்தோலிக்க பாடசாலையில் நடைபெறும்.
நடைபெற்று முடிந்த கலை இலக்கிய போட்டிகளில் யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயம், யா/ வல்வை சிவகுரு வித்தியாசாலை, யா/ வல்வை சிதம்பரக் கல்லூரி, யா/ தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் , யா/ உடுப்பிட்டி A.M.C, யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, யா/ ஹாட்லிக் கல்லூரி, யா/ இமையாணன் இ.த.க , யா/ வல்வெட்டி இ.த.க மற்றும் யா/ பொலிகண்டி இ.த.க ஆகிய பாடசாலைகளில் இருந்து அதிகளவான மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றம் நடாத்தும் 10 வது கலை இலக்கிய பெருவிழாவின் போது பணப் பரிசுகளும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கம் என்பன வழங்கி கௌரவிக்கப்படுவர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.