வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுக்கு மேற்காக கடந்த 2 தினங்கள் முன்பு உருவான தாழமுக்கம் தற்போது அதி தீவிர தாழமுக்கமாக (depression) மாறியுள்ளது.
Port Blair துறைமுகத்துக்கு வட மேற்கு திசையில் சுமார் 375 கடல் மைல்கள் தொலைவில் தற்பொழுது நிலை கொண்டுள்ள இந்த அதி தீவிர தாழமுக்கம் நாளை புயலாக (cyclonic storm) மாறவுள்ளது. தொடர்ந்து மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக (severe cyclonic storm) மாற்றம் அடைந்து எதிர்வரும் 26 ஆம் திகதி இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் கரையைக் கடக்கவுள்ளது.
நாளை உருவாகும் புயலுக்கு, 'யாஸ்' என்ற அரேபிய மொழி பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஓமான் நாட்டில் இருந்து, இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.