ஆழ்கடலில் பல நாட்கள் தங்கியிருந்த மீன் பிடிக்கும் முறைக்கான பயிற்சி ((Multi day fishing boat training) ஒன்று அடுத்த மாதம் 9 ஆம் திகதி அளவில் வல்வையில் இடம்பெறவுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினால் (Department of Fisheries and Aquatic Resources) இந்தப் பயிற்சி நெறி மேற்கொள்ளப்படவுள்ளது.
கீழே படத்தில் பருத்தித்துறை துறை முகத்தில் மீன் பிடிக்குத் தயாரவுள்ள சிறிய ரக மீன்பிடிப் படகு ஒன்றைக் காணலாம். இதன் மூலம் சுமார் ஒரு மாத காலம் தொடர்ச்சியாக கடலில் தங்கியிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க முடியும்.
இது பருத்தித்துறை மீனவர்களுக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.