இலங்கை கடற்கரையில் எரிபொருள் மற்றும் இயற்கை வாயுக்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்வதற்காக ஒரு ஆய்வுக் கப்பல் இலங்கை வந்துள்ளது.
பனாமா அரசாங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பீ.ஜீ.பி.பைனியர் என்ற இந்தக் கப்பல் நாட்டின் கடல் எல்லைகளில் உள்ள புவிச்சரிதவியல் தரவுகளை சேகரிக்கும்.
கிழக்கு மற்றும் வடகிழக்குக் கடற்பரப்பில் 5 ஆயிரம் கிலோ மீற்றர் பரப்பளவிற்கு நிரம்பியுள்ள கடற்பிரதேசத்தில் இந்த எரிபொருள் ஆய்வு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.. இந்த ஆராய்ச்சிக்காக பெற்றோலிய வளத்துறை அமைச்சு உலகின் மிகப்பெரிய எரிபொருள் நிறுவனமான பிளம்பர்லர் என்ற நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துள்ளது. இதன் மூலம் சேகரிக்கப்படும் தரவுகளை எதிர்காலத்தில் எரிபொருள் ஆராய்ச்சி மற்றும் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களிடம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.