இலங்கையைவிட்டு விலகிச் செல்லும் புயல், ரோனு எனப் பெயர் இடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2016 (வெள்ளிக்கிழமை)
வங்காள விரிகுடாவின் தென் மேற்காக, நேற்று முன்தினம் மாலை இந்திய நேரப்படி 1730 ற்கு தமிழ் நாட்டின் தலைநகர் சென்னைக்கு தெற்கு தென் கிழக்குத் திசையில் சுமார் 95 கடல் மைல்கள் தொலைவில் (பருத்தித்துறைக்கு வடக்கு வட கிழக்காக சுமார் 250 கடல் மைல்கள்) நிலை கொண்டிருந்த தீவிர தாழமுக்கம் (Depression) தற்பொழுது புயலாக (Cyclone) மாறி வட கிழக்காக நகர்ந்து வருகின்றது.
இந்தப் புயலுக்கு ரோனு (Roanu) எனப் பெயர் இடப்பட்டுள்ளது. குறித்த இந்தப் புயலே வங்காள விரிகுடாவில் இந்த வருடம் ஏற்பட்டுள்ள முதலாவது புயல் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தற்பொழுது (இலங்கை நேரப்படி மாலை 6 மணியளவில்) பருத்தித்துறைக்கு வடக்கு வட கிழக்காக சுமார் 650 கடல் மைல்கள் (சுமார் 900 கிலோ மீட்டர்கள்) தொலைவில் விசாகப்பட்டினத்திற்கு கிழக்காக மையங்கொண்டு இலங்கையை விட்டு நகர்ந்து வருகின்றது. வங்காள விரிகுடாவில் உருவாகி நகரும் புயல் ஒரு போதும் தெற்கு திசை நோக்கி நகரமாட்டாது என்பதால் இலங்கைக்கு இதனால் மேலும் எதுவித பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்க்கள் இல்லை .
தீவிரம் குறைந்த புயலாக (Cyclone) நகரும் ரோனு எதிர்வரும் 21 ஆம் திகதி பங்காளதேசின் துறைமுக நகரான சிற்றாகோங்கை (Chittagong) தாக்கவுள்ளது.
கடந்த 13 ஆம் திகதி இலங்கைக்கு கிழக்காக உருவாகியிருந்த தாழமுக்கம் ஆனது தீவிர தாழமுக்கமாக மாறி (புயலாக மாறாமல்) தமிழ் நாட்டின் பாம்பனுக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பகுதியை கடந்த 17 ஆம் திகதி காலை கடந்து வலுவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்குறித்த 2 தாழமுக்கங்களால் இலங்கையின் பல பகுதிகளிலும் கடும்மழை பெய்துவருவதுடன் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
கீழே படத்தில் தற்பொழுது புயலின் மையம் மற்றும் எதிர் பார்க்கப்படும் பாதை என்பன காட்டப்பட்டுள்ளன.
இதனுடன் தொடர்புபட்ட எமது முன்னைய செய்தி
வங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம், புயலாக மாறவுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.