தொண்டைமானற்றின் நேற்று முன்தினம் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி பின்னர் இறந்த இளைஞன் வடமராட்சி இமையாணன் கிழக்கைச் சேர்ந்த 1 8 வயதான சுதாகரன் சங்கீத் ஆவார்.
நேற்று முன்தினம் பிற்பகல் சுமார் 0230 மணியளவில் தொண்டைமனாற்றின் அக்கரை கடல் நீரேரிப் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. குறித்த இடத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது சுழியில் அகப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
நீரில் மூழ்கிய இளைஞனை காப்பாற்ற முடியாத நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் இளைஞனை மீட்டு முதலுதவி அளித்து, வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிதுள்ளனர். வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் குறித்த இளைஞனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.