மண்டான் களப்பு பகுதியில் நீர் வேளாண்மையை மேம்படுத்தும் கருத்திட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2021 (புதன்கிழமை)
வடமராட்சி – மண்டான் பிரதேச களப்பு பகுதியில் களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இறால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் இறால் குஞ்சுகளை நீரில் விடும் நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (3) நடைபெற்றது.
இதற்கு அமைய சுமார் 2.2 மில்லியன் பெறுமதிகொண்ட 40 இலட்சம் இறால் குஞ்சுகள்; மண்டான் களப்பு பகுதியில் விடப்பட்டது.
களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இறால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்திட்டத்தின் பயனாக மண்டான் பிரதேசத்தில் வாழும் 270 குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது.
இதனிடையே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொண்டமனாறு பாலத்தினை அண்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டதுடன் தொடர்ச்சியாக மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தார்.
தொண்டமனாறு களப்பு பிரதேசத்தில் கடலுணவு வளர்ப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கான சாதக பாதகங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.