யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை கட்டணம் தொடர்பில் பேச்சு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/10/2019 (புதன்கிழமை)
யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைக் கட்டணம் தொடர்பில் இந்திய விமான நிறுவனங்களுக்கும் இலங்கைத் தரப்பினருக்குமிடையே பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் கடந்த 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட நிலையில் நவம்பர் முற்பகுதியில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் விமான சேவைக் கட்டணம் தொடர்பில் இந்திய விமான நிறுவனங்கள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் நிதி அமைச்சுடன் பேச்சை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் விமான சேவை நிறுனங்கள் பயணச் சேவைக் கட்டணத்தை குறைப்பதற்கு விமான நிலைய வரியைக் குறைக்குமாறு கோரியுள்ளன. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரின் விமான சேவைக்கட்டணத்துடன் 60 டொலர் விமானநிலைய வரி அறிவிடுகின்றது.
இதேளளவு விமான நிலைய வரியை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் பயணியிடம் அறவிட்டால் விமான சேவைக் கட்டணத்தைக் குறைந்த விலையில் வழங்க முடியுமெனத் தெரிவித்துள்ளதகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்பிரகாரம் விமான சேவைக் கட்டணம் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லையெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கட்டுநாயக்க போல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வசதிகள் இல்லாதநிதிலையில் 60 டொலர் விமான நிலைய வரியை அறவிடுவது நியாயமற்றதென யாழ்.வர்த்தகத் தரப்பினர் தெரிவித்தனர். (தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.