ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகத்திற்கு எட்டு லட்சம் லீற்றர் நீர் தேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2018 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறையில் அமைக்கப்பட்டுவரும் நீச்சல் தடாக வேலைகள் நிறைவடைந்துவரும் நிலையில் தண்ணீர் விடப்பட்டு பரிசீலிக்கப்படவுள்ளது. இதன் வேலைகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
நீச்சல் தடாகத்தில் நீர் விடப்பட்டு பரிசீலிக்கப்பட்ட பின்னரே அகழப்பட்ட பகுதிகள் மூடப்படவுள்ளது. நீர் விடப்பட்டு பரிசீலிக்கப்பதற்காக எட்டு லட்சம் லீற்றர் நீர் தேவைபடுவதால் இது தொடர்பில் ஆராய்வதற்காக பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதில் யாழ் அரச அதிபர் நா.வேதநாயகம், பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆ.ஸ்ரீ, பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் அ.சா.அரியகுமார், கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் த. ஜங்கரன், வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர், பருத்தித்துறை நகரசபை தவிசாளர், வலிகாமம் பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.