வல்வை நகரசபையில் அண்மையில் தீருவில் பொதுப் பூங்காவில் கடந்த கால உள்நாட்டு யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் தூபி அமைப்பது என்னும் பிரேரணை முன்வைக்கபட்டு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பிரேரணையை முன்வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் (ஒருவர் நீங்கலாக), ஈ.பி.டி.பி உறுப்பினர் இருவரும் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
பிரேரணை சபையில் வெற்றிபெற்றபோதிலும், குறித்த முடிவுக்கு எதிராக பரவலாக வல்வையில் பலரும் தமது அதிருப்தியை வெளியிட்டுவருகின்றனர்.
புலிகள் தவிர்ந்த ஏனையோருக்கு தூபி அமைக்கக் கூடாது என்று பலரும் , தூபியே ஏன் தற்பொழுது அவசியம் எனப்பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை குறித்த பிரேரணைக்கு எதிராக பொது மக்கள் மத்தியில் கையெழுத்து வேட்டையில் ஒரு சாரார் ஈடுபட்டுவருகின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.